<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-33228447</id><updated>2011-04-21T21:16:48.545-07:00</updated><title type='text'>இதுதான் இஸ்லாம்</title><subtitle type='html'>The # 1 Tamil Muslim Site from Idhuthanislam.com</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>7</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-116372903371316721</id><published>2006-11-16T17:51:00.000-08:00</published><updated>2006-11-17T04:04:41.490-08:00</updated><title type='text'>எது சரியான கல்வித் திட்டம்?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எது சரியான கல்வித் திட்டம்? கல்விச் சிந்தனை!&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கல்வி, உலகத்தை மட்டுமின்றி இதர அண்ட சராசரங்களையும் புணரமைப்பதற்குரிய அடித்தளமாகும். பரந்த உலகில் எந்த ஒரு அங்குலத்தில் எந்த ஒரு மாற்றம் நடைபெற வேண்டுமானாலும் கல்விதான் முதல் விதி. கல்வியின் ஆரம்பத்தை நாம் அறிந்தாலும் அதன் முடிவு எங்கே என்று யாருக்கும் தெரியாது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்பதற்குரிய முற்றுப்புள்ளி இங்கே இல்லை. சிறந்த, மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்குவது கல்விதான். ஆனால் எந்த மனிதராலும் கல்வியை உருவாக்க முடியாது. புதிய கல்வித் திட்டம் என்பதெல்லாம் ஏற்கனவே கற்றதின் மறு வடிவம் தானே தவிர கருவரையில் புதிதாக உற்பத்தியாவதல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனி மனிதன் முதல் - குடும்பம் - நாடு என்று சர்வதேச ஆக்கத்திற்கும், அழிவிற்கும் கல்வியே வித்தணு.இத்தகைய கட்டுப்பாட்டில்லா புரட்சிக்குரிய கல்வி குறித்து இஸ்லாமிய பார்வை என்ன? என்பது தலையான வினாவாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கல்வி குறித்து நாம் சிந்திக்கும்போது எதிரே தெரியும் முஸ்லிம்கள் மிகப் பரிதாபத்திற்குரியவர்களாகவே காட்சியளிக்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படைக் கல்வியின் அவசியம் என்ன? உலகியல் சாதனங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும், தம் சொந்த காலில் நின்று தமக்காகவும், தம் சமூதாயத்திற்காகவும் கல்வியை எப்படி வளப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகளெல்லாம் இந்த மக்களிடம் வந்துவிடக்கூடாது என்பதில் இந்த சமுதாயத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;செல்வம் கொழிக்கும் நிலவளத்தை இறைவன் இந்த மக்களிடம் கொடுத்திருந்தும், கல்வியின்மையின் காரணத்தால் இம்மக்கள் அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையே தொடர்கிறது. இஸ்லாம் மறுமை என்ற பெருவாழ்வை மையமாக வைத்து இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் சொல்கிறது. இந்த சிந்தனை மேலோங்கினால்தான் உலக வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் அமையும். ஆனால் முஸ்லிம்கள் 'மறுமை வாழ்வு' என்ற ஒரு அடையாள வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு இவ்வுலகில் மிகப்பெரும் தோல்வியைத் தழுவி நிற்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கல்வி விஷயத்தில் மாடுகளின் வாயில்களில் மென்று துப்பப்பட்ட வைக்கோலின் நிலையில் உள்ளார்கள் என்றால் அது தகுந்த வார்த்தையாகும். இந்திய அளவில் முஸ்லிம்களின் கல்வி வீழ்ச்சிக்கு முஸ்லிம்களாலேயே துவங்கப்பட்ட அரபு மதராஸாக்களும் ஓரளவு காரணமாக அமைந்துள்ளது.கல்வியை உலகக்கல்வி, மார்க்கக்கல்வி என்று இறு கூறாகப் பிரித்து மார்க்கத்திற்கு என்று மதராஸாக்கள் துவங்கப்பட்டது. அப்படித் துவங்கப்பட்ட மதரஸாக்களில் பெரும்பாலானவை மார்க்கத்தைக் கூட அதன் அடிப்படையோடு போதிக்கத் தெரியாமல் சமுதாய முன்னேற்றத்திற்கெதிரான நவீன உலகிற்கு ஈடுகொடுக்க முடியாத கல்வி(?)யையே போதித்து வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியேறுகிறவர்கள் சமுதாயத்தில் ஒரு கணிசமான தொகையினரைத் தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தாம் மதரஸாவில் படித்த கல்வி வழியிலேயே அழைத்துச் செல்கிறார்கள். இது மிகப் பரிதாபமான நிலையாகும். எதற்கும் பயனற்ற இந்த மதரஸா கல்வித்திட்டத்தின் மீது எரிச்சல் கொண்டு வேறு கல்வியை நோக்கி பயணிக்கத்துவங்கிய சில முஸ்லிம்கள் மேற்கத்திய கல்வித் திட்டத்தில் தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு தமது தனித் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து நிற்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து பரஸ்பர வாழ்த்துக் கூறிக்கொள்ள இஸ்லாம் கற்றுக் கொடுக்கும் 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்கள் மீது சாந்தி நிலவட்டும்) என்ற அழகிய வார்த்தைகூட மேற்கத்திய கல்வியில் தம்மைப் புதைத்துக் கொண்ட முஸ்லிம்களிடம் இல்லை. உலகப்புரணமைப்பிற்கு மேற்கத்திய கல்வி தவிர வேறு வழியே இல்லை என்ற சிந்தனை இவர்களின் உள்ளங்களில் சிலுவையாய் அறையப்பட்டுள்ளன. இஸ்லாம் வகுத்துக் கொடுக்கும் இறைச்சட்டத்திற்கெதிரான மனிதச்சட்டங்களை நிலை நாட்டும் போராட்டத்தில் இந்த முஸ்லிம்களும் தென்படுவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1.உலகத்தையோ, கடும் உழைப்பினால் ஏற்படும் வாழ்க்கை முன்னேற்றத்தையோ கண்டுகொள்ளாமல் அடுத்தவர்களைச் சார்ந்து நின்று தம் வாழ்க்கையின் சொற்ப வருமானத்தைப் பெற்றுத் தரும் இஸ்லாத்திற்கெதிரான நவீன சவால்களை எதிர் கொண்டு, அந்த சவால்களை முறியடிக்கும் கல்விக்குப் பதிலாக அந்த சவால்களை ஆமோதிப்பது போன்ற கல்வியை போதிக்கும் மதரஸா கல்வியையோ..,&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2. வரையறையற்ற வாழ்க்கை சுகம், சோஷலிஸம், செயற்கைகள் பெற்றுத்தரும் பேர், புகழ், சுகம் இவைகளை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய கல்வியையோ இஸ்லாம் அதன் அசல் கல்வித் திட்டமாக ஏற்கவில்லை. இறைவனால் தேர்வு செய்யபப்ட்ட நபிமார்கள், கல்வியை உலகம், மார்க்கம் என்று பிரித்தறிவிக்கவில்லை. ஒன்றோடொன்றை பிணைத்துத்தான் போதித்தார்கள் - வாழ்ந்து காட்டினார்கள். குர்ஆன் நெடுகிலும் இந்தக் கல்வித் திட்டம் வியாபித்துள்ளது. ஆதம் (அலை) என்ற முதல் மனிதரைக் கொண்டே கல்வி துவங்குகிறது. அவரது கல்வித் திட்டம் என்ன?.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பூமியில் பிரதிநிதியை ஏற்படுத்தப்போகிறேன் என்று உம் இறைவன் மலக்குகளிடம் கூறிய போது அவர்கள் (இறைவா) பூமியின் ஒழுங்கு அமைப்புகளை சீர்குலைத்து அதில் இரத்தம் சிந்துவோரையா நீ அமைக்கப்போகிறாய். இன்னும் நாங்கள் உன்னை புகழ்ந்து உன்னை துதித்து உன் அருட்புகழைப் போற்றியவர்களாக இருக்கிறோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 2:30)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதம்(அலை) அவர்களின் படைப்பு குறித்து இறைவன் அறிவித்த போது மலக்குகள் செய்த ஆட்சேபனைதான் இந்த வசனத்தில் கூறப்படுகிறது. மனித படைப்பின் துவக்கம் ஆரம்பத்திலேயே ஆட்சேபனைக்குரியதாக இருந்துள்ளது. முக்கிய இரண்டு ஆட்சேபனைகள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;1 பூமியின் ஒழுங்கமைப்பு சீர்குலைவது&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;2 இரத்தம் கொட்டும் அட்டூழியம் நிகழ்வது.&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவை இரண்டுமே அறிவால் நிகழ்வதாகும். மனித படைப்புக்கு முன் பூமியின் நிலை இந்த இரண்டு பிரச்சனைகளும் எழாத தூய்மையாக இருந்துள்ளது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் விளங்களாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை(இறைவனாகிய) நாமே பிரித்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா (அல்குர்ஆன்: 21:30)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நிராகரிப்பவர்கள் காணவில்லையா என்ற அறிவியல் உண்மை கேள்வியாக பிறப்பதிலிருந்து வானம் போன்றே பூமியும் தூய்மையானதாக இருந்தது மனித இனத்தால் தான் அது பாழ்படுகிறது என்ற உண்மை தெளிவாகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மலக்குகளின் ஆட்சேபனையை தொடர்ந்து நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன் என்று இறைவன் கூறுகிறான்.(அல்குர்ஆன்:2:30)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வானவர்கள் அறியாத விஷயம் என்று இங்கு இறைவன் எதைக் கூறுகிறான்? என்பதை அறிய வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எல்லாப்(பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு(இறைவன்) கற்றுக்கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி(மனிதரைப்படைக்க ஆட்சேபனை தெரிவித்தீர்களே) நீங்கள் உண்மையாளர்களாயின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்றான். (அல் குர்ஆன்:2.31)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அதற்கவர்கள்(இறைவா) நீ தூயவன், நீ எங்களுக்கு கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதைப் பற்றிய அறிவும் எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேகம் மிக்கவன் என்றார்கள். (அல்குர்ஆன்:2:32)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆதமே அப்பொருள்களின் பெயர்களை வானவர்களுக்கு விவரிப்பீராக என்றான் இறைவன். அவர் அப்பெயர்களை வானவர்களுக்கு விவரித்தார். (அல் குர்ஆன் 2:33)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது வரை உள்ள விபரங்களை முதலில் விளங்குவோம். உன்னை வணங்க, துதிக்க, நாங்கள் இருக்கும் போது பூமியை பாழ்படுத்தக் கூடிய மனித இனத்தை ஏன் படைக்கப் போகிறாய்? என்பது வானவர்களின் கேள்வி, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்பது இறைவனின் பதில். வணங்குவதற்கு அதாவது மலக்குகள் வணங்குவது போன்று முழு நேர இறை வணக்கத்திற்காக அல்லாமல் இன்னும் சில காரியங்களுக்காக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். அது தான் பூமியை ஆளுமை செய்யும் பணி, இப்பணிக்காக தேர்தெடுக்கப்பட்ட முதல் மனிதர் தான் ஆதம் (அலை) அவர்கள். அவரது ஆளுமைக்குரிய எல்லா பொருள்கள் பற்றியும் அவருக்கு கற்பிக்கப்படுகிறது. அவரே அதை வானவர்களுக்கு அறிவிக்கும் அளவிற்கு அவர் வசிக்கப் போகும் பூமியை பற்றிய அறிவை அவர் இறைவனிடமிருந்துப் பெறுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேற்கண்ட வசனங்களில் பெயர்கள் என்று மொழிப்பெயர்கப்படும் இடங்களில் 'அஸ்மாவு,' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மொழி ரீதியாக 'பெயர்கள்' என்பது தான் பொருள் என்றாலும் ஆதம் (அலை) சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு பெயர்கள் என்பது மட்டும் முழுமையான பொருளாக அமையாது. எப்படி ? ஒரு பொருளின் பெயர் தெரிவதால் மட்டுமே அப்பொருளை இயக்கி விட முடியாது. பெயர் என்பது ஒருபொருளை சுட்டிக்காட்டத்தானே தவிர அதன் இயக்கதத்தை கற்பிப்பற்கல்ல. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கம்பியூட்டர் என்ற பெயர் இன்று எல்லோருக்கும் தெரியும். பெயரைத் தெரிந்தவர்கள் எல்லாம் கம்யூட்டரை இயக்கமுடியுமா என்றால் முடியாது. இது கம்யூட்டருக்கு மட்டும் பொருந்தும் விதியல்ல. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கும் இது தான் விதி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதம் (அலை) அவர்கள் முதலாவதாக இந்த உலகிற்கு வரும் மனிதர் அவருக்கு முன் யாரும் வந்து அவருக்காக உலகத்தை தயார் படுத்தி வைக்கவில்லை. அவர்தான் தம் மனைவியோடு சேர்ந்து தமக்கு தேவையான எல்லாவற்றையும் உலகில் செய்ய வேண்டும். உணவுக்கு உழுது பயரிட வேண்டும். நிலம், நெல்மணி என்ற பெயரை தெரிந்துக் கொண்டால் மட்டும் நிலத்தில் அது விளைந்து விடாது. உழவு, பாத்தி, தேவையான தண்ணிர், தட்ப சூழல் பற்றிய அறிவோடு நிலத்தை உழுது பயிர் விதைத்தால் தான் - கதிர்களின் தன்மையையும், அறுவடை காலத்தையும் அறிந்தால் தான் - உணவு உற்பத்தியில் வெற்றிப் பெற முடியும். எனவே ஆதம்(அலை) இறைவனிடமிருந்து உழவுத் தொழில் மற்றும் விவசாய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தங்குவதற்கு இடம் தேவை, காற்று மழை வெயில் என்று பூமியை சூழ்ந்துள்ள விசயங்களை எதிர் கொண்டு தம்மையும் மனைவி சந்ததிகளையும் பாதுகாத்தக் கொள்ள தங்குமிடம் வேண்டும். அது தேவை என்றால் அதை உருவாக்கத் தேவையான அறிவு வேண்டும். 950 ஆண்டு இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்யாமல் ஆதம் நபி வாழ்ந்து விட்டு சென்றார் என்று நம்ப முடியாது. தங்குமிடம் பற்றிய அறிவையும் இறைவனிடமிருந்துப் பெற்றிருப்பார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவர் காலத்தில் அவருக்கு மனித எதிரிகள் இல்லை. ஆனால் கொடிய மிருகங்களிடமிருந்து தன்னை தற்காக்கும் நிலை அவருக்கு கட்டாயம் ஏற்பட்டிருக்கும். வெறும் கைகளால் மட்டும் அம் மிருகங்களை எதிர்த்து போராடியிருக்க முடியாது. கத்தி, கோடாரி, அறுவால் போன்ற ஆயுதங்கள் அவசியம் அவருக்கு தேவைப்பட்டிருக்கும். அதனால் ஆயுதங்கள் பற்றிய அறிவையும் இறைவன் கற்றுக் கொடுத்திருப்பான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஓரளவாவது மருத்துவ அறிவு இருந்திருக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இப்படியெல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஆதம் (அலை) அவர்களுக்கு பொருள்களின் பெயர்களை மட்டும் கற்றுக் கொடுத்திருக்க முடியாது அவற்றோடு அப் பொருட்களை நிர்வகிக்கும் - பயன்படுத்தும் - அறிவையும் சேர்த்துதான் கற்பித்திருக்க வேண்டும் என்பதை விளக்கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆதம் (அலை)யும் ஹவ்வாவும் சுவார்கத்தில் குடி புகுந்து வாழும் வேளையில் ஷெய்த்தானால் மனதில் ஊசலாட்டம் ஏற்பட்டு ஒரு மரத்தை - இறைவன் தடுத்த மரத்தை - நெருங்குகிறார்கள். உடனே தமது வெட்கத்தலங்கள் சம்பந்தமான தாக்கம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே மரத்திலுள்ள இலைகளை பறித்து தம் வெட்கத் தலங்களை மறைத்துக் கொள்கிறார்கள். இந்த விபரங்களெல்லாம் அல்குர்ஆன் 7:19 - 22 வரையுள்ள வசனங்களில் கிடைக்கின்றன.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மரம் மரத்திலுள்ளது இலை என்ற பெயர் மட்டும் ஆதம் (அலை) ஹவ்வாவிற்கு தெரிந்திருந்தால் அந்த இலைகளை கொண்டு மானத்தை அவர்களால் மறைத்திருக்க முடியாது. இலைகளை இதற்கும் பயன்படுத்தலாம் என்ற அறிவு இருந்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும். இந்த விபரங்களிலிருந்து ஆதம் அவர்களுக்கு இறைவன் கற்றுக் கொடுத்த அறிவு அதாவது பெயர்கள் என்னவென்பதை விளங்கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆதம் (அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்பித்தது வணக்க வழிபாடுகளை சார்ந்த பெயர்களாகவோ அறிவாகவோ இருக்க முடியாது. ஏனெனில் மனிதர்களை விட எல்லா விதமான வணக்கங்களையும் அறிந்து அதில் குறை வைக்காமல் இறைவனை வணங்குபவர்கள் அவர்கள். எனவே தாம் குடும்பத்தோடு வசிக்கப் போகும் இயக்கப் போகும் பூமியைப் பற்றிய அறிவையே வானவர்களுக்கு ஆதம்(அலை) கற்றுக் கொடுத்துள்ளார்கள். வணக்க அறிவுடன் சேர்ந்து ஆளுமை அறிவும் மனிதனிடம் இருப்பதால் தான் தம்மை விட அறிவில் ஆதம் சிறந்தவர் என்பதை (ஸஜ்தாவின் மூலம்) வானவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இவ்வாறு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தான் மலக்குகளுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு பூமிக்கு இறங்கி தேவையான போது இறைவனிடமிருந்து வழி காட்டுதலைப் பெற்ற ஆதம் (அலை) உலகக் கல்வி, மார்க்க கல்வி என்றெல்லாம் பிரிக்காமல் இரண்டையும் கற்று மிக சிறப்போடு இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்குங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மார்க்கக் கல்வி வேறு, உலகக் கல்வி வேறு என்று நம் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பதுப் போல் நபிமார்கள் கல்வியை இரண்டாகப் பிரிக்கவில்லை என்பதை ஆதம் நபி வாழ்விலிருந்து நாம் கற்கும் பாடம் தெளிவாக உணர்த்துகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நீங்கள் இங்கிருந்து &lt;/span&gt;&lt;span style="color:#3366ff;"&gt; இறங்குங்கள் உங்களுக்கு பூமியில் தங்குமிடம் உள்ளது அதில் ஒரு (குறிபிட்ட) காலம் வரை சுகம் அனுபவிக்கும் வழியுமுண்டு என்று (ஆதமுக்கு இறைவன்)கூறினான். (அல்குர்ஆன்7:24)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வளரும் இறைவன் நாட்டப்படி&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அபூநஹ்லா&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-116372903371316721?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/116372903371316721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=116372903371316721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116372903371316721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116372903371316721'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/11/blog-post.html' title='எது சரியான கல்வித் திட்டம்?'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-116151653658572080</id><published>2006-10-22T04:16:00.000-07:00</published><updated>2006-10-30T00:56:26.753-08:00</updated><title type='text'>ஈவ்டீஸிங் பாடலாசிரியர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஈவ்டீஸிங் பாடலாசிரியர்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண்ணியத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் எதிராக எழுதித் தள்ளும் திரைப்பட கவிஞர்கள் பற்றியும் அவர்களின் பாடல்வரிகள் பற்றியும் ஓர் அலசல்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;திரைப் படங்கள், இவை ஆக்ரமிக்காத, தொட்டுப் பார்க்காத மனித மனங்கள் அகில உலகிலும் மிகக் குறைவு. பிற எல்லாவற்றையும் விட மனித மனங்களை கவர்ந்திழுக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் அதற்குப் பிறகு வந்த காலகட்டங்களிலும் கூட திரைப்படங்கள் ஓரளவு நாட்டின் மீதான தாகத்தையும், நேர்மையான ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்களையும் மக்களுக்குப் படம் பிடித்துக் காண்பித்தன. குடும்ப உறவை பேணுதல், கணவன் மனைவிக்கு மத்தியிலான கட்டுபாடான வாழ்க்கை முறை, குழந்தைகள் மீதான அக்கறை - கவனம் என்று திரைப்படங்கள் இந்திய சமூக அமைப்பை வலுப்படுத்தும் முகமாகவே படமாக்கப்பட்டன. வரம்பு மீறல்கள் இருப்பின் அவை தணிக்கைக் குழுவால் வெட்டி எரியப்பட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அனைத்துப் படங்களும் இதே அடிப்படையில் வந்தவைதான் என்று நாம் சொல்லவில்லை. பல திரைப்படங்கள் வெறும் பொழுதுப் போக்கிற்காகவே எடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. ஆனாலும் அவை மற்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் போல மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பழங்கால திரைப்படங்களில் வேலை செய்த அனைவருமே தங்களுக்குத் தாங்களே சமூக பொறுப்பையும் அக்கறையையும் அதிகமாக சுமந்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அப்படங்களின் கதை காட்சி அமைப்பு - பாடல்கள் போன்றவை சாட்சியாகின. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்றைக்கு திரைப்படத் துறை படுவேகமாக வளர்ந்து விட்ட நிலையில் அதோடு சேர்ந்தே சீரழிவும் வளர்ந்துள்ளது என்பதற்கு திரைக்கதை - காட்சி அமைப்பு - பாடல்கள் என்று எல்லாமும் ஆதாரமாக இருக்கின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;திரைக்கதைப் பற்றிய விமர்சனங்களை விட தமிழ்ப்படங்களில் இடம்பெரும் பாடல்கள் அதற்கான காட்சி அமைப்புகள் ஆகியவையே அதிகப்படியான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில் பார்வையாளனின் மனத்திரையில் திரைப்படங்களின் மொத்த காட்சிகளை விட பாடல் வரிகளும் அந்த பாடல்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பின்னணி காட்சிகளுமே ஆழமாகப் பதிகின்றன. பாடல்களே மீண்டும் மீண்டும் தொலைகாட்சிகளில் - வானொலிகளில் ஒலி - ஒளிப்பரப்பப் படுவதால் அதன் ஆழம் இன்னும் அழுத்தமாகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எது ஒன்றும் மக்களிடம் எந்த அளவிற்கு சென்றடைகின்றதோ அந்த அளவிற்கு அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 'மீடியாக்காரர்களுக்கு' நாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் - மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல் வரிகளை உருவாக்குபவர்களுக்கு உண்மையிலேயே கூடுதல் மனிதத்துவ சிந்தனை இருக்க வேண்டும். மெட்டுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளைப் போட்டு பாடலை எழுதி விடலாம் என்று பாடலாசிரியர் நினைத்தால் அதுவே அவர்களின் கொள்கையின்மையையும் அடிமைத்தனத்தையும் படம் பிடித்துக் காட்டி விடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; இருப்பினும் சில பாடலாசிரியர்கள் கண்டனத்திற்குள்ளாகும் போது 'நாங்கள் என்ன செய்வது.. மெட்டுக்கு ஏற்றது போன்று பாடல் எழுத வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டதே..' என்று தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதை அவர்களின் பேட்டிகளை படிக்கும் போதோ - பார்க்கும் போதோ அறியலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்கள் சொல்வது போல மெட்டுக்கு பாட்டு எழுத வேண்டும் என்பது காலத்தின் நிர்பந்தம் என்று அவர்களுக்காக வைத்துக் கொண்டாலும் பாடல் வரிகளின் மீதும் வார்த்தைகளின் மீதும் எத்தகைய நிர்பந்தமும் இல்லை. அதை தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. வார்த்தைகளில் ஏற்படும் விபரீதங்களே அழுத்தம் வாய்ந்தவையாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இசையை ரசிக்கத்தான் முடியும் அதை சிந்திக்க முடியாது. ஆனால் பாடல் வரிகளை ரசிக்கவும் முடியும் சிந்திக்கவும் முடியும் செயல்படுத்தவும் முடியும். அத்தகைய பாடல் வரிகளில் ஏராளமானவை 'பெண்மைக்கு எதிராகவே' திரைப்படங்களுக்காக எழுதப்பட்டு வருகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெண் என்பவள் வர்த்தகத்திற்கு ஏற்ற கவர்ச்சிப் பொருளாகவே ஆணாதிக்க சிந்தனையில் எப்பொழுதும் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறாள். அவளது எண்ணங்கள் உணர்வுகள் எதுவொன்றும் அவளது புறத் தோற்றம் பற்றிய ஆண்களின் சிந்தனைக்கு முன் தொடர்ந்து தோல்வியைத் தான் தழுவுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எங்கும் பெண் - எதிலும் பெண் என்ற நிலை உருவாகி வருவது அவளது கல்வி, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள வெற்றியாக இன்றைக்கும் கருத முடியாது. அப்படியே கருத வேண்டி வந்தாலும் அதில் ஓரளவே நியாயமிருக்கும். அதை கடந்த அனைத்துமே அவளது உடல் தோற்றத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வெற்றியேயாகும். இத்தகைய வெற்றியை கொடுப்பதில் நாங்கள் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் தான் தமிழ் பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதி வருகின்றார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'எப்படி எப்படி சமஞ்சது எப்படி.. சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி..' என்று ஒரு பாடல் தமிழகத்தில் வெளி வந்த தருணங்களில் 'பெண்மை கேள்விக்குறியாக்கப்பட்டது'. அந்தப் பாடலால் பெண்கள் அனுபவித்த சீண்டல்களும் தொல்லைகளும் ஏராளம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வீடு, வீதி, அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுக்குப் பின்னாலும் வக்கிர ஆண்களால் இந்தப் பாடல் வரிகள் மெதுவாகவோ சப்தமாகவோ முனு முனுக்கப்பட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இளமைப் பருவம் என்பது வாழ்வில் முக்கியமானப் பகுதியாகும். அது பக்குவப்படுத்த வேண்டிய காலகட்டம் என்றாலும் 'வயசுக் கோளாறு' என்ற வார்த்தையால் இளமைப் பருவம் எத்தகைய தவறிலும் ஈடுபடலாம் அது தப்பில்லை என்ற மன நிலை உருவாகியுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இத்தகைய போதனையே பாடலாசிரியர்களின் வரிகளில் வெளிப்படுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சைட் அடிப்போம் தம்மடிப்போம்&lt;br /&gt;தண்ணியதான் கலந்தடிப்போம்&lt;br /&gt;புக்ஸ் மட்டும் எடுக்கவே மாட்டோம் (பார்த்திபன் கனவு) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சின்ன சின்ன அத்துமீறல்கள்&lt;br /&gt;அது கொலைக் குற்றமாகாது (தமிழன்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'புத்தகங்கள் வகுப்பறைகள் டார்ச்சர்களே..' என்று வைர முத்து எழுதுகிறார் (ஆசை ஆசையாய்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; 'லைபாய் இருக்குமிடம் ஆரோக்யம் தான் ஒரு பிளேபாய் ஆகுமிடம் காலேஜ் தான்' என்று விஜய் எழுதுகிறார் (ஏப்ரல் மாதத்தில்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; 'இவ கட்டுடலு ஒரு கல்லூரிதான் அதில் கல்வி கற்க நான் வந்தேனடா..' என்று கபிலன் எழுதுகிறார் (யூத்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'உனக்குப் பிடிச்சா அள்ளு அள்ளு&lt;br /&gt;ஊரு கெடக்கு தள்ளு தள்ளு'&lt;br /&gt;'ஆடுகிற வயசில்&lt;br /&gt;ஆடித்தான் பார்க்கணும் அள்ளு&lt;br /&gt;அட்வைஸ் பண்ணி எவனாச்சும்&lt;br /&gt;வந்தான்னா தள்ளு' இது வாலியின் உபதேசம் (பகவதி) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கல்லூரிகளுக்கும் கல்விக் கூடங்களுக்கும் இதை விட கேவலம் வேறு என்ன வேண்டும். சைட் அடித்து தம்மடித்து தண்ணியையும் கலந்தடித்து சின்ன சின்ன அத்துமீறல்கள் தப்பில்லை என்ற பாடத்தை மாணவர்கள் பாடலாசிரியர்களிடமிருந்துப் பெற்றதால் தான் சரிகா ஷா உட்பட பல இளம் பெண்கள் கல்லுரியிலிருந்து கல்லறைக்குப் போனார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இத்தகையப் பாடல்களால் அதை எழுதி வரும் பாடலாசியரியர்கள் எத்தகைய மன - கருத்தோட்டங்களில் இருக்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் - குறிப்பாக சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் - விளங்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாடல்களுக்கு ரசனையும் மன கிளர்ச்சியும் தான் முக்கியம் என்ற மன பக்குவத்தை திரைப்பாடல்கள் நமக்கு ஊட்டி விட்டதால் தான் அதன் கருத்துக்களையோ தாக்கங்களையோ நாம் கண்டுக் கொள்ளாமலிருக்கிறோம். இதுவே பாடலாசிரியர்கள் தங்கள் சிந்தனா போக்கில் வடிகட்டிய பெண் அடிமைத்தனத்தையும் பாலியல் வக்கிரங்களையும் நிறைத்துக் கொள்ள தூண்டுகோலாக அமைந்து விடுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை' (ஜெமினி) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'லைசென்ஸ் இல்லாத யாரைப் பார்த்தாலும்&lt;br /&gt;லவர் இவளென்று தோணுது' (தமிழன்) போன்ற வரிகளை வைரமுத்து பாடலாக்கியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வரிகளில் அப்பட்டமாக பெண்களுக்கு எதிரான 'வன்முறைகள்' தூவப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை என்ற போதனை ஓர் இளைஞனின் மனதில் பதிந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது மேட்டுக் குடியாக வாழும் வைரமுத்து(க்கள்) குடும்பத்துப் பெண்களல்ல. ஏனெனில் அவர்களை பணம் என்ற மெய்க்காப்பாளன் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வான். அடுத்தக் கட்ட மக்களே அனைத்திலும் பாதிக்கப்படுவது போன்று இது போன்ற தூண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளிலும் அவர்களே சிக்குவார்கள். சிதைக்கப்படுவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'லைசென்ஸ் இல்லாத எவரும் லவர்' என்ற வக்கிர எண்ணத்தில் இருக்கும் வைரமுத்து அதை போதனையாகவும் முன் வைக்கிறார். தாலி என்ற சடங்குத் தேவையில்லை என்ற முற்போக்கு சிந்தனையில் திருமணம் செய்து கொண்டவர்களையும், திருமணமே செய்யப்படாதவர்களையும் திரும்பிப் பார்க்கலாம்-தீண்டலாம் என்ற கருத்தைத் தவிர வேறு எந்த கருத்தையும் இந்த வரி முன் வைக்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெற்றவளும் பெண் - உடன் பிறந்தவளும் பெண் - மனைவியும் பெண் - மகளும் பெண் என்ற பெண்ணிய உணர்வு துளியாவது இருந்தால் இது போன்ற வக்கிரங்கள் யார் மனதிலும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் திரையுலகம் என்பது பாலியல் கூடாரமாகி விட்டதால் அங்கு பிரசவமாகும் எது ஒன்றும் அந்த வாடையைத் தான் பெற்றிருக்கும் என்பதை மெய்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பாடலாசிரியர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'மண்ணில் உள்ள பொருள் என்னவென்று&lt;br /&gt;செயற்கைக் கோள்கள் தேடும்&lt;br /&gt;ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்னவென்று&lt;br /&gt;என் கண்கள் தேடும்' (வைரமுத்து - தமிழன்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'பொண்ணுங்க முகங்களை பார்க்கவே மாட்டோம்&lt;br /&gt;ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்' (விஜய் - ஏப்ரல் மாதத்தில்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..' (விஜய் - சமுத்திரம்) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு' (வைரமுத்து - ஜெமினி) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுபோன்ற வரிகள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மனதில் மௌனமாகவே பெரும் போராட்டத்தையும், சஞ்சலத்தையும், அத்துமீறலையும் கண்டிப்பாகவே ஏற்படுத்தும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆபாசம் என்பது 'பச்சையாக கதை எழுதுவதற்கும் - காட்சி அமைப்பதற்கும் மட்டுமே கொடுக்க வேண்டிய முத்திரையா.. பாடல்களுக்கு அது பொருந்தாதா.. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..&lt;br /&gt;தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா.' போன்ற வரிகள், &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு, குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு..' (வைரமுத்து) போன்ற வரிகள், &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'நாயுடுஹாலா மாறிவிட நாங்க ரெடி எங்கள மார்போடு சேர்த்துக் கொள்ள நீங்க ரெடியா' போன்ற வரிகள் இவைகள் போதிக்க வரும் அறிவுரைதான் என்ன..? இவை ஆபாச சந்தையில் விற்பனையாகும் விபச்சாரமாகாதா?.. அல்லது இதற்கு வேறு என்ன பெயர் கொடுப்பது? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெண் என்பவளை 'ஒரு சீண்டல் அடையாளமாகவே' முன்னிருத்தி வரும் இது போன்ற பாடல்கள் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். பேருந்துகள் உட்பட பெண்கள் நிறைந்துள்ள இடங்களில் இதுபோன்ற பாடல்கள் ஒலி பரப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும். காமத்தை பாடலாக்கி பணம் பண்ணும் பாடலாசிரியர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் விதத்தில் வெகுஜன நெருக்கடி ஏற்பட்டாக வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாடல்தானே பிடித்தால் ரசிப்போம் பிடிக்காவிட்டால் ஒதுங்கிச் செல்வோம் என்ற மனநிலையை நாம் பின்பற்றினால் ஈவ்டீஸிங்கால் பாதிக்கப்படும் பெண்களின் குரலுக்காக திறக்கப்படவிருக்கும் நீதிமன்றக் கூண்டுகளில் பாடலாசிரியர்களுடன் நாமும் ஏற வேண்டி வரும் எச்சரிக்கை!. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பரங்கிப்பேட்டை. ஜி.என்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-116151653658572080?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/116151653658572080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=116151653658572080' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116151653658572080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116151653658572080'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/10/blog-post_22.html' title='ஈவ்டீஸிங் பாடலாசிரியர்கள்'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-116094976913510048</id><published>2006-10-15T14:53:00.000-07:00</published><updated>2006-10-15T15:02:49.156-07:00</updated><title type='text'>ஆன்மீகம் முழுமைப்பெற அவர் வேண்டும்</title><content type='html'>&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆன்மீகம் முழுமைப் பெற அவர் வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நீங்கள் இறைவனை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் மூலம்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். இறைவன் மன்னிப்பவன். நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் குர்ஆன் 3:31)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது குர்ஆனில் மூன்றாம் அத்தியாயத்தின் 31வது வசனம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் 'பளிச்' சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் அல்ல இது. அதன் வார்த்தை ஒவ்வொன்றையும் சிந்தித்து படிப்பினை பெற வேண்டிய வசனமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இனி விரிவாக அணுகுவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீங்கள் இறைவனை நேசித்தால் என்னை பின்பற்றுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனிதன் சதாவும் எதையாவது ஒன்றை நேசித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேசத்தை ஏதோ ஒரு விதத்தில் அவன் வெளிபடுத்தியும் காட்டி விடுகிறான்.&lt;br /&gt;பணத்தை நேசிக்கிறான், மனைவி மக்களை நேசிக்கிறான், உணவையும் - தூக்கத்தையும் நேசிக்கிறான் - மற்ற மற்ற சிலர் மார்க்கத்திற்கு விரோதமான - சமூக தீங்கைக் கூட நேசிக்கிறார்கள். குடி - சூது - கடத்தல் -  பொதை பொருள் - அன்னிய பெண்கள் என்று நேசம் பல எல்லைகளையும் கிளைகளையும் கொண்டுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாம் நேசிக்கக் கூடிய மனைவியை பார்ப்போம். அந்த தருணங்களில் மனம் குதூகளிக்கும் முகம் அந்த குதூகளிபை வெளியில் காட்டி விடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பணத்தை நேசிப்போம். அது கையில் கிடைத்தவுடன் முகம் அதன் அடையாளத்தை காட்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தீய காரியங்களை செய்ய துணியும்போது சமூகத்திலிருந்து மறைந்து அந்த காரியத்தை செய்கிறான் மனிதன். 'மறைந்துக் கொள்ளுதல்' என்பது அவன் நேசத்தை காட்டி விடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலர்கள்களின்  அவசரமும் - துடிப்பும்; அவர்களின் நேசத்தை உலகிற்கு சொல்லி விடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தாயை கண்டவுடன் அவளை நேசிக்கும் குழந்தை தாவி தவழ்ந்து ஓடி வந்து அவள் மீதேறி தன் நேசத்தை வெளிபடுத்தும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;புரிந்துக் கொண்ட - மனம் நிறைந்த நண்பர்கள் சந்திக்கும் போது சிரித்து மகிழ்ந்து ஆரத்தழுவி தங்கள் நேசத்தை உலகிற்கு காட்டுவார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படியாக நேசத்திலிருந்தும் அதை வெளிபடுத்திக் காட்டும் தன்மையிலிந்தும் விடுபட்ட மனிதர்கள் யாருமே உலகில் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதே அடிப்படையில் இறைவனை நேசிக்கும் தன்மை மனித இயல்பில் கலந்துள்ளது. உலகில் வாழும் மக்களில் 95 சதவிகிதமானவர்கள் இறைவனை நேசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த நேசத்தில் தான் பெருத்த சிக்கல்களும் - முரண்பாடுகளும் தென்படுகின்றன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஸ்லிம்களாகட்டும், ஹிந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், இன்னும் பிற மதத்தவர்கள், மொழிக் காரர்கள், நாட்டவர்கள் இவர்கள் அனைவருமே தன் தாயை - காதலியை - மனைவியை - நண்பர்களை - உற்றார் உறவினரையும் சுற்றத்தாரையும் நேசிக்கும் விதமும் அந்த நேசத்தை வெளி காட்டும் விதமும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இதே மக்கள் இறைவனை நேசிக்கும் விதத்தையும் - அதை வெளி காட்டும் விதத்தையும் எண்ணிப்பாருங்கள்.!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முஸ்லிம்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்கள் ஒரே இறைவனை மிக வலுவாக நேசிக்கக் கூடிய சமுதாயத்தவர்கள். ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் இறை நேசத்தின் ஆழத்தை புரிந்துக் கொள்ளக் கூடிய வழியை கற்காமல் அதில் பெரும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் இறந்துப் போனவர்கள் மீதும் அவர்களின் சவக் குழிகளின் மீதும் - மத குருக்களாக கருதப்படும் ஹஜ்ரத்கள் - ஷேக்குகள் என்ற மனிதர்கள் மீதும் அளப்பறிய நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்லும்படியெல்லாம் நடப்பதே இறை நேசம் என்றெண்ணி ஓரிறை கோட்பாட்டில் விபச்சார தன்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிலேயே நிலைத்தும் நிற்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹிந்துக்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியா என்ற மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வாழ்பவர்கள். மிகச் சிறந்த அறிவாளிகள் - பண்பாளர்கள் - கல்வியாளர்கள் - சிந்தனையாளர்கள் என்று இவர்களின் தரம் பெருகி இருந்தாலும் இவர்களின் இறை நேசத்தின் வெளிபாட்டை - ஆன்மீக வழிபாட்டை கவனித்தால் அந்த தரம் மிக்கவர்களா இப்படி என்று எண்ணத்தோன்றி விடும். ஆம். மிக உயர்ந்த படைப்பாகிய மனிதர்கள் தன்னோடு எந்த விதத்திலும் - நிலையிலும் ஒப்பிட்டே பார்க்க முடியாத - அந்த தகுதி அறவே இல்லா - தவற்றையெல்லாம் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்லும் - மண்ணும் - மரமும் - மட்டையும் - மலமும் - பாம்பும் - எலியும் - பல்லியும் - பறவையும் - இவர்களின் இறைவனாகிப் போய் இவர்களை ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிறிஸ்துவர்கள்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;வழிகாட்ட வந்தவரையே வணங்கத்துவங்கியவர்கள். பிறப்பும் - பசியும் - தாகமும் - இயலாமையும் - பலவீனமும் - தூக்கமும் - துக்கமும் - எரிச்சலும் - கோபமும் - கடைசியில் இறப்பும் கொண்ட - மலஜல குடலை சுமந்துக் கொண்டு வாழ்ந்த ஒருவரை இறைவனின் சந்ததி என்றாக்கி - அவருக்கு இறை மகன் என்று பெயரிட்டு பின்னர் அவரை கல்லாக்கி - சிலையாக்கி சிலையை நேசிக்கவும் - வழிபடவும் துவங்கி விட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நேசம்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முரண்பாடுகள் கொண்ட இந்த அறியாமையை போக்க என்ன வழி? கற்றுக்கொடுப்பது என்பதை தவிர வேறு வழியில்லை. வலது கையால் உண்ணும் இயல்பான நிலையிலிருந்து மாறி இடது கையால் ஒரு குழந்தை உண்ணும் போது அங்கு அந்த குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பாகி விடுகிறது. அறிவிருந்தும் தெரிந்துக் கொள்ள சக்தியற்ற மாணவனுக்கு புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பது ஆசிரியரின் கடமையாகி விடுகிறது. அதே போன்று தான் இறை நம்பிக்கையும் இறை நேசமும் பாழ்பட்ட பழக்க வழக்கங்களால் கறை படியும் போது அதிலிருந்து அவற்றை தூய்மை படுத்தி மக்களுக்கு புரிய வைப்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்த பாடத்தை செவ்வனே மக்களுக்கு போதிக்கும் பணியை இறைவன் இந்த வசனத்தில் துவங்குகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'இறைத்தூதரே நீர் கூறும். மக்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவனை நேசிப்பதற்கும் இவரை பின்பற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி இங்கு எழலாம். அர்த்தமுள்ள கேள்விதான். ஒரு அடிப்படையை புரிந்துக் கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லப்பட்டவரும், சொல்பவரும் ஒரு சாதாரண மனிதராக மட்டுமில்லை. அவரை இறைவன் தன் தூதராக தேர்ந்தெடுத்துள்ளான். இறைத்தூதர் என்ற நிலையிலிருந்து அந்த வார்த்தை சொல்லப்படுகிறது. சொல்லக்கூடிய மனிதரை மட்டும் பார்க்காமல் அவருடைய தகுதியையும் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;அவர் ஒரு இறைத்தூதர். இறைவனை பற்றி மக்களுக்கு அறிவித்து அவன் விரும்பும் விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பணிக்கப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர் அவர். தன் மீது விதிக்கபட்ட பணியில் அவர் ஒரு கடுகளவேனும் குறைப்பாடு செய்யவில்லை என்பதால் இறைவனை அறியும் விதத்தையும் - அவன் மீதான நேசத்தையும் அவரை பின்பற்றியே பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற சூழ்நிலை இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனிதர்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற வார்த்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் தன் விருப்பத்தில் சொன்ன வார்த்தையல்ல. அந்த வசனத்தில் 'நீர் சொல்வீராக' என்ற ஏவல் வந்துள்ளது. அதாவது இப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டளை இறைவனால் பிறப்பிக்கப்படுகிறது. இறைவனே அப்படி சொல்ல சொன்னதிலிருந்து அவனை அடையும் வழியை எவ்வளவு துள்ளியமாக முஹம்மத்(ஸல்) பெற்றுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்த வழியை முஹம்மத் அவர்களை தவிர வேறு யாரும் பெறவில்லையா என்ற கேள்வி அடுத்து எழலாம். அனேக மக்கள் பெற்றிருந்தனர். அந்த மக்கள் அனைவருமே இறைத்தூதர்கள் என்ற அந்தஸ்தில் இருந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் முஹம்மத் அவர்களின் வருகைக்கு முன்னால் தம் தமது சமூகங்களுக்கு மட்டுமே வழிகாட்ட அனுப்பப்பட்டார்கள். பணியின் வட்டம் சிறியதாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அது மட்டுமின்றி அந்த இறைத்தூதர்களின் மறைவுக்கு பிறகு அந்தந்த மக்கள் இறைத்தூதர்கள் கொண்டு வந்த வழிமுறையில் - போதனையில் பல மாற்றங்கள் செய்து புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டனர். (இதற்கு உதாரணமாக கிறிஸ்துவத்தை குறிப்பிடலாம். இயேசு கொண்டு வந்த கொள்கை இன்றைக்கு பைபிளிலோ - கிறித்தவ உலகிலோ இல்லை. இயேசுவிற்கு பிறகு பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டதாக சொல்லிக் கொண்ட பவுல் என்பவரே   இன்றைய கிறித்தவத்தை உருவாக்கினார் இதற்கு பைபிளிலிருந்து அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைக்க முடியும். ஒரு பெரிய மதத்தின் நிலையே இதுவென்றால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் பற்றிய நிலையை நாம் சாதாரணமாக புரிந்துக் கொள்ளலாம்.)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஹம்மத்(ஸல்) அவர்களின் பணி உலகலாவிய பணியாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையின் பாதுகாப்பு ஏற்பாடு மிக பலப்படுத்தப்பட்ட நிலையில் இறைவனால் ஆக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறைத்தூதரே! நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம் என்று இவைன் கூறுகிறான் (அல் குர்ஆன் 34:28)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்நிலையில் உலக மக்களில் எவராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தூதரை பின்பற்றுபவர்களாகத்தான் மாற வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற அறிவிப்பு மிக ஆழம் மிக்கதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவனை நேசிப்பதாக இருந்தால் நேராக இறைவனையே பின்பற்றி விட்டு போக முடியாதா... சத்தியமாக முடியாது. 'பின்பற்றுதல்' என்றால் ஒருவரை மாடலாக்கி அவர் செய்வது போன்று செய்வதாகும். அ.ஆ.. இ,ஈ என்று சொல்லி கொடுக்கும் ஆசிரியரின் ஓசையையும் உச்சரிப்பையும் அப்படியே திருப்பி சொல்லும் குழந்தைகளின் நிலையே பின்பற்றுவதற்குரிய நிலையாகும். இறைவனை பின்பற்றுவது என்பது - அதாவது அவனைப் போன்றே செயல்படுவது - எவராலும் (எவராலும் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் அழுத்தி உச்சரித்துக் கொள்ளுங்கள்) ஒருக்காலமும் முடியாத காரியமாகும். எவராலும் முடியாத அந்த தன்மைகளில் தான் உண்மையான இறை சக்தியே அடங்கியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவனை நேசிப்பதற்கான அடையாளம் என்னவென்றால் அவன் ஏவியப்படி வாழ்ந்துக் காட்டுவதேயாகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவரே முஹம்மத் என்ற அந்த இறைத் தூதர் ஆவார்கள். அவர் வாழ்ந்துக் காட்டிய ஒவ்வொரு அங்குலத்திலும் இறை நேசத்திற்குரிய அடையாளங்கள் குவிந்துக் கிடப்பதால் உலகில் உள்ள எவரும் அவரைத்தான் தனக்கு மாடலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இந்த அறிவிப்பையும் முன்னிருத்தி விட்டான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவரை பின்பற்றி இறைவனை அறிதல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்துப்போன இறை நம்பிக்கையில் தான் எத்துனை வேறுபாடுகள் - எத்துனை பாகுபாடுகள். கற்கால மனித சிந்தனையில் உதித்த மகா பயங்கரமான - மாயாஜாலமிக்க கடவுள் கொள்கையும், மனிதனாகவே கடவுளை வர்ணித்து - வடிவமைத்துக் கொண்ட மனித கடவுள் கொள்கையுமே நாத்திகம் உயிர் பெறுவதற்கான மூலக் கூறுகளை உருவாக்கி கொடுத்து விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்மையான இறைவனை அறியும் வழியை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதரிடமிருந்துப் பெற்றால் அந்த பாடத்தில் கடுகின் முனை அளவிற்கு கூட பலவீனம் இருக்காது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவன் ஒருவன் - அவன் தனித்தவன் - பெறப்பட்டவனோ - பெற்றவனோ அல்ல - அவன் தேவையற்றவன் -  அவனுக்கு நிகராக எதுவுமில்லை -  எல்ல சத்கிகளையும் தன் அதிகாரத்திற்கு கீழ் வைத்துள்ளவன் அவன் - அவனோடு போட்டிப் போடக் கூடிய மாற்று சத்கி எதுவுமில்லை -  உறக்கம் - முதுமை - ஆசை - இச்சை - மறதி - மரணம் - என்ற எந்த கறையும் படியாதவன் அவன். எவரது கண்களுக்கும் - கருவிகளுக்கும் எட்டாத இடத்தில் இருந்துக் கொண்டு பிரபஞ்சம் அனைத்தையும் அவன் சூழ்ந்தறிந்து அவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். எந்த கண்களும் அவனை கண்டதில்லை. உலக வாழ்வில் எவரும் காண போவதுமில்லை. எந்த தவறை வேண்டுமானலும் செய்து விட்டு - சமூக கொடுமைகளில் சிறப்பாக பங்களித்து விட்டு - எப்படி வேண்டுமானலும் பொருளாதாரத்தை திரட்டி விட்டு - இறைவனுக்காக உண்டியலில் பணக் கட்டுகளையும் - தங்கத் தகடுகளையும் காணிக்கையாக்கி (இறைவனுக்கு லஞ்சம்) விட்டால் போதும் அவன் நம்மை ஆசிர்வதித்து விடுவான் என்ற சிந்தனை உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் அழிவின் பாதையில் செல்கிறீர்கள் ஏனெனில் உண்மையான அந்த இறைவன் நீதி மிக்கவன். லஞ்சமோ, வாதாடுதலோ, பரிந்துப் பேசுதலோ அவனிடம் எடுபடவே படாது.  அப்படிப்பட்ட அந்த மகா சக்திக்கு கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையே தூய்மையான வாழ்க்கை. இதுதான் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் மனிதகுலத்திற்கு வழங்கிய இறைக் கோட்பாடாகும். இந்த இறைக் கோட்பாட்டில்தான் உண்மையான இறை நேசம் அடங்கியுள்ளது. இப்போது அந்த வசனத்தைப் படியுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'மனிதர்களே நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்'&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் இறைவனை நேசிக்கிறோம் இறைவன் நம்மை நேசிக்கிறானா...&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அடுத்தக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். சிறந்த பலனை அடைவதற்காக ஒருவன் கடினமாக உழைக்கிறான். ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் படிக்கிறான் இந்த உழைப்பாலும் படிப்பாலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி வாழ்வில் விரக்தியையும் தோல்வியையுமே சந்திப்பார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தண்ணீர் என்பது மனித வாழ்க்கைக்கு எத்துனை அவசியமானது! 50 அடி தூரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்து 'போரிங்' போட்டால் கிடைக்கும் தண்ணீரை கண்டு மனம் குதூகளிக்கிறது. சில இடங்களில் 200 அடி வரை பைப் இறக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் தண்ணீர் எங்கு இருக்கிறது என்ற அறிவு அவர்களுக்கு இல்லாததேயாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஐம்பது அடியில் கிடைக்கும் சந்தோஷம் இருநூறு அடிகளை கடந்த  பிறகும் சிலருக்கு கிடைக்காமல் போவதை யோசித்துப் பார்த்தால் 'செயலுக்கு முன்னால் அதன் பலன் குறித்து சிந்திப்பது - ஆராய்வது' என்ற வழிக்காட்டுக் கொள்கை தெளிவாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;போய் சேரக்கூடிய ஊரை மட்டும் ஒருவன் தெரிந்துக் கொண்டு அந்த ஊருக்கான வழியை தெரிந்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டு தன் பயணத்தை துவங்குகிறான் என்றால் இந்த பயணத்தின் முடிவு குறித்து யாராலும் தீர்வு சொல்ல முடியுமா...&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உலகில் உள்ள அவ்வளவு ஆத்திகர்களுமே நாங்கள் இறைவனை அளவு கடந்து நேசிக்கிறோம் என்ற 'இறை நேச தேசத்திற்கு' தன் பணயத்தை துவங்கி விடுகிறார்கள். அதே சமயம் இறைவன் நம்மை நேசிக்கிறானா... என்ற அந்த வழியை - இறை நேச தேசத்தை அடையும் வழியை - அலட்சியப்படுத்தி விட்டுப் பயணிக்கிறார்கள். காற்றலையில் ஊர்கோலம் போகும் இவர்களின் இந்த ஆன்மீக தேடல் திக்குத் தெரியாமல் தான் அலைந்துக் கொண்டிருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தான் நேசிக்கும் - உயிரையே வைத்திருக்கும் அந்த பெண் தன்னை நேசிக்கிறாளா... அவள் மனதில் தனக்கு இடமுள்ளதா... இருவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ அவள் தன்னை அங்கீகரிப்பாளா... என்ற முடிவோ - முயற்சியோ - தேடலோ இல்லாமல் போன காதல் ஒருதலை காதலாகவே சிதைந்துப் போகும். இந்த ஒருதலை காதலில் அவ்வப்போது மன ரீதியாக சில சந்தோஷங்கள் ஏற்படலாம். அவள் நினைவுகளே போதும் என்ற வரட்டு வார்த்தை வெளிப்படலாம். ஆனால் காதலியை மனைவியாக்கி அவளோடு வாழும் காலங்களில் கிடைக்கும் 'அற்புதமான இன்பத்தை' இந்த ஒரு தலை காதலர்களால் அடைந்துக் கொள்ளவே முடியாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறைவன் நம்மை நேசிக்கிறானா என்று தெரிந்துக் கொள்ளாமல் நாம் இறைவனை நேசிக்கும் அந்த ஆன்மீகம் 'ஒருதலை ஆன்மீகமாகவே அமைந்து போகும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நாம்இறைவனை நேசிப்பது போன்று இறைவனும் நம்மை நேசிக்க வேண்டும் அதுதான் முழுமையான ஆன்மீகமாக இருக்கும். இறைவன் நம்மை நேசிக்கிறானா ?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பரங்கிப்பேட்டை. ஜி.என்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-116094976913510048?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/116094976913510048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=116094976913510048' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116094976913510048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116094976913510048'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/10/blog-post_15.html' title='ஆன்மீகம் முழுமைப்பெற அவர் வேண்டும்'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-116064542751444704</id><published>2006-10-12T02:18:00.000-07:00</published><updated>2006-10-12T02:34:29.656-07:00</updated><title type='text'>குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?</title><content type='html'>&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;குர்ஆன் மட்டும் பாதுகர்க்கப்படுகின்றது ஏன்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட ஒரு கேள்வி. ''விமர்சன விளக்கம்'' என்ற வலைப்பூவில் இந்தக் கேள்வி கிடைத்தது. அந்த வலைப்பூவில் இந்தக்கேள்விக்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக சில விளக்கங்களுக்காக..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கேள்வி: இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் அவன் ஏன் முந்தைய வேதங்களைப் பாதுகாக்கவில்லை. எதற்காக ஒரு வேதத்தை இறக்கி பின்னர் அதை அழியவிட்டு அதன் பின்னர் மற்றொரு வேதத்தை இறக்க வேண்டும். அனைத்துக் காலத்திற்கும் ஏற்றவகையில் ஒரு வேதத்தை வடிவமைத்து இந்தகாலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள். இந்தக் காலத்தில் நீங்கள் இதைப் பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு அறிவித்திருக்கலாமே..! என்பது கேள்வியின் முக்கியப்பகுதி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சில அடிப்படைகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாம் என்பது மக்களை நம்பிக்கை என்ற வட்டத்தில் மட்டும் நிறுத்தி எது பற்றியும் சிந்திக்காதே.. மாற்றுக் கருத்துக் கொள்ளாதே.. கேள்வி கேட்காதே.. என்று முடக்கும் ஒரு மார்க்கம் அல்ல. சிந்தித்துப்பார், கேள்வி கேள், விவாதித்துத் தெளிவு பெறு என்று அழைப்புவிடும் ஒரு மார்க்கமாகும். இந்த இஸ்லாமியப் பார்வையை கவனத்தில் வைத்துக் கொண்டு கேள்வியை அணுகுவோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனித இனம் பூமியில் வாழத்துவங்கிய காலம் தொட்டே முரண்பாடுகள் தோன்றத் துவங்கி விட்டன. மனித அறிவின் பலவீனங்கள் முரண்பாடுகள் தோன்றுவதற்கும், அது வலுபெறுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய முரண்பாடுகளை நீக்குவதற்கும், மனித அறிவால் தெளிவு பெற முடியாதவற்றிற்கு வழிகாட்டுவதற்கும் இறைவனின் வழிகாட்டல் தேவைப்பட்டது. அந்த வழிகாட்டலை அவன் இறைத்தூதர்களுக்கு வழங்கி நீங்கள் வாழ்ந்துக்காட்டுங்கள். அதுதான் பிறருக்கு மாடல் என்ற வழியை ஏற்படுத்தினான். இறைத்தூதர்களுக்கு எது செய்தியாக அறிவிக்கப்பட்டதோ அது அவர்களுக்கு வாழ்க்கையாக அமைந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு செய்தியை அறிவிக்கும் போது 'சிந்தியுங்கள். இந்த செய்தியை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் சொந்த விருப்பத்தைப் பொருத்தது. ஏற்றீர்கள் என்றால் மரணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை இப்படி இருக்கும். ஏற்கவில்லை என்றால் நீங்கள் மரணத்திற்கு பிறகு இந்த வாழ்க்கையை சந்திப்பீர்கள்' என்ற அடிப்படையில் தான் இறைச் செய்திகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சுதந்திரத்தை இறைவன் மிக நீண்டக் காலம் முழமையாக வழங்கினான். இந்த சுதந்திரம் அவர்களால் தவறாகவே பயன்படுத்தப்பட்டது. எந்த அளவிற்கென்றால் இறைவனின் வேதத்தை தங்கள் விருப்பத்திற்கு நாங்கள் மாற்றிக் கொள்வோம் என்ற அளவிற்கு அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதற்கு பெரும் ஆராய்ச்சித் தேவையில்லை. கண்முன் கிறிஸ்த்தவர்கள் கைகளில் இருக்கும் பைபிள் இதற்கு தெளிவான சான்றாகும். இயேசு கொண்டு வந்து போதித்த சுவிசேஷங்களுக்கும் இன்றைய கிறிஸ்த்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் பைபிளுக்கும் தொடர்பில்லை எனும் அளவிற்கு அந்த மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தி வேதத்தை மாற்றினார்கள். பவுல் என்பவர் இதில் பெரும் பங்கு வகித்தார். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;மனிதர்களுக்கு இறைவன் சுய சுதந்திரத்தை வழங்காமல் சட்டங்களை - வேதத்தை அவர்கள் மீது திணித்திருந்தால் அது அவர்களால் மாசுப்படுத்தப்படாமல் தான் இருந்திருக்கும். ஆனால் இறைவன் அதை ஒரு போதும் விரும்பவில்லை. அவனை ஏற்பதிலும் - அவன் சட்டங்களை ஏற்பதிலும் - அவன் வேதத்தை பாதுகாப்பதிலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திரம் பாழ்படுத்தப்படும் போது என்ன கெடுதிகள் ஏற்படுமோ அது இறை வேதங்களுக்கும் ஏற்பட்டது பல வேதங்கள் வருவதற்கு இதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை இதை ஏற்க மாட்டேன் என்பதற்கும், எனக்கு இந்தக் கொள்கைப் பிடிக்கவில்லை அதனால் நான் இந்தக் கொள்கையை மாற்றுவேன் என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முந்தைய சமுதாயம் குறிப்பாக அதன் தலைவர்கள் பிந்தையதை செயல் படுத்தினார்கள். &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஹம்மத் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் ஏன் பாதுகாக்கப்பட்டது அப்படியானால் முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுய சுதந்திரம் வழங்கப்படவில்லையா... வேத வசனங்கள் திணிக்கப்பட்டதா... என்ற குறுக்கு விசாரணை இங்கு வரலாம். இறைவன் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதியில் அவன் எந்த மாற்றமும் செய்துக் கொள்ள மாட்டான். மனிதர்களுக்கான சுய சுதந்திரம் என்பது முதல் மனிதருக்கு எப்படி வழங்கப்பட்டதோ அதே சுதந்திரம் உலகின் கடைசி மனிதருக்கும் உண்டு. இறைவன் அதை நிறைவாக வழங்கியுள்ளான். முந்தைய மக்களுக்கு என்ன அறிவிப்பு வழங்கப்பட்டதோ அதே அறிவிப்பு இன்றைக்கு குர்ஆனிலும் உண்டு. அதுதான் 'இதை விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்' என்பதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஹம்மத் அவர்கள் சந்தித்த அரேபிய மக்களுக்கு இறை வேதங்களை மாற்றும் மனப் பான்மை இல்லை. அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த முதல் வேதம் இதுதான். (கடைசி வேதமும் இதுதான்) இறைவன் பிற பல்வேறு சமுதாயங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இறைத்தூதர்களை அனுப்பி வேதங்களை வழங்கி கவுரவித்த போதும் அவர்கள் அதை பாழ்படுத்தினார்கள். ஆனால் அன்றைய அரேபியர்கள் தமது சமுதாயத்திற்கு இறைவேதம் வந்துள்ளது என்றவுடன் அதைப் பாழ்படுத்த துணியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'விரும்பியவர்கள் ஏற்கலாம், விரும்பியவர்கள் நிராகரிக்கலாம்' என்ற சுதந்திரத்தில் முஹம்மத் அவர்கள் கொண்டு வந்த கொள்கையை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அதை நிராகரித்து வெளியில் நின்றார்களேத் தவிர இறை வேதத்தை மாற்றிக் கொள்வோம் என்ற முயற்சியில் யாரும் இறங்கவில்லை. முஹம்மத் அவர்கள் இறைத்தூதராக இருக்க முடியுமா..? என்ற சந்தேகம் சிலருக்கு அன்றைய பொழுதுகளில் தோன்றிய போது அவரை இறைத்தூதர் என்று நிருபிக்கும் அசைக்க முடியாத ஒரே ஆதாரம் குர்ஆன் தான், எனவே அவர் விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டால் இது போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று முதலில் அவர்களுக்கு சவால் விடப்பட்டது. பின்னர் சவாலை மிக இலகுபடுத்தி முழு வேதத்தை கொண்டு வர முடியாவிட்டாலும் பரவாயில்லை இது போன்று சில வசனங்களையாவது கொண்டு வர முயற்சியுங்கள் என்று சொல்லப்பட்டு முஹம்மத் அவர்களின் இறைத்தூதுத்துவம் நிரூபிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு வேதம் மாசுபடாமல் பாதுகாக்கப்படுவதற்கும், பாழ்பட்டுப் போவதற்கும் அந்த வேதம் வழங்கப்பட்ட மக்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்துக் கொண்ட எவரும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக அரேபிய மக்களை கருத்தில் கொள்வார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பொதுவாகவே பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பிற வேதங்கள் அந்தந்தப் பகுதி அல்லது மொழி பேசும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் குர்ஆன் முழு உலகுக்கும் இறைச் செய்தியை எத்தி வைக்கக் கூடிய பொது வேதமாகும். அதனால் அதன் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் தேவைப்பட்டது. அந்தப் பொறுப்பை இறைவன் தன் வசம் எடுத்துக் கொண்டான். 'இந்த வேதத்தை நாமே இறக்கினோம் நாமே அதை பாதுகாப்போம்' (குர்ஆன்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் வித்தியாசங்கள் இப்படித் துவங்குகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய வேதங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாமே.. என்ற சந்தேகங்கள் தோன்றலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'புதுப்பித்தல்' என்பது நெருக்கடியையும், புதிதாக உருவாக்குதல் என்பது விசாலத்தையும் குறிப்பதாகும். ஒரு வீட்டை புதுப்பிப்பதற்கும், அதை இடித்து விட்டு விசாலமாக புதிதாக கட்டுவதற்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு முன் வைக்கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய வேதங்கள் பகுதிக்குட்பட்டதாக இருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டோம். குர்ஆன் பகுதி என்ற அந்த எல்லை நீக்கப்பட்டு விசாலப்படுத்தப்பட்டதாகியது. விசாலமாக ஒரு உடை கிடைத்து விட்ட பிறகு கிழிந்துப் போன பழைய உடையை தைத்துப் போடுவது சிறந்தது என்று யாரும் கருத மாட்டார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சட்டங்களில் மாற்றம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விசாலமாக இறைவன் குர்ஆனை கொண்டு வந்ததற்கு காரணம் முந்தைய வேதங்களில் இருந்த சட்ட நெருக்கடிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு கொடுக்கப்பட்ட சட்டம் பொதுசட்டமாக ஆக வேண்டுமானால் அதற்கு மிகப் பொருத்தமான காரணங்கள் இருக்க வேண்டும். சீக்கியர்கள் குறுவாள் வைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு பகுதிக்கான அல்லது ஒரு இனத்தவருக்கான சட்டம். இதை உலகின் பொதுசட்டமாக ஆக்க வேண்டும் என்று கூற முடியாது, அவ்வளவு ஏன் இந்தியாவிற்குள்ளேயே இதை பொதுசட்டமாக கொண்டுவாருங்கள் என்று சொல்ல முடியாது. சொல்பவர்கள் நிச்சயம் சட்டத்தையும், கலாச்சாரத்தையும், இடங்களையும் பற்றிய அறிவில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காலகட்டத்திற்கு ஏற்ப பல சட்டங்களை முந்தைய வேதங்களில் வகுத்த இறைவன் காலகட்டங்களில், சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதற்கு ஏற்ப சட்டங்களை கொண்டு வந்தான். +&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவனுக்கு பிந்தைய காலம் பற்றிய அறிவில்லையா... அவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் பிந்தைய காலகட்டத்திற்குரியவற்றையும் முன்னரே கூறி இருக்கலாமே.. என்ற கேள்வி அவ்வப்போது பலரால் முன் வைக்கப்படுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தன்னை சிந்தனைவாதி என்று எண்ணிக் கொள்பவர்கள் சற்றும் பொருத்தமில்லாத கேள்விகளை எப்படித்தான் வைக்கிறார்களோ என்பது உண்மையில் வருந்தத்தக்கதுதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தைக்கு மென்மையான உணவுகளை கொடுக்கிறாள் என்றால் அவளுக்கு அந்த குழந்தை வளர்ந்தப் பிறகு கடின உணவு உண்ணும் என்ற அறிவு இல்லை என்று யாரும் கூறுவார்களா... பிற்காலத்தில் குழந்தை உண்ணும் என்பதற்காக அதன் ஒரு வயதிலேயே எல்லா உணவுகளையும் வாங்கி பாதுகாத்து வைப்பாளா... &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நிச்சயம் அந்த தாய்க்கு தன் குழந்தை பிற்காலத்தில் என்ன உணவு உண்ணும் என்பது தெரியும் ஆனாலும் இன்றைக்கு அந்த உணவை கொடுக்கவும் மாட்டாள் அதை வாங்கி பாதுகாக்கவும் மாட்டாள். இறைவனுக்கு அனைத்தும் தெரிந்தாலும் அவன் சூழ்நலைக்கு தகுந்த சட்டங்களைத்தான் மக்களுக்கு வழங்குவான். நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை வழங்கி சடங்காக வைத்துக் கொள்ள வழிகாட்டமாட்டான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனவே,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய மக்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் அவர்களால் பாழ்படுத்தப்படதாலும்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய வேதங்கள் சில பகுதிகள் - சில மக்கள் என்று குறிப்பிட்ட நிலையை கொண்டிருந்ததாலும்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அரேபியர்கள் இறை வேதத்தை பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள் என்பதாலும்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குர்ஆன் முழு உலகிற்கும் பொது சொத்தாக விசாலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்ததாலும்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சூழ்நிலைகளும் - காலகட்டங்களும் பெருமளவு மாறி விட்டதாலும்,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முந்தைய வேதங்கள் முடிவுக்கு வந்து புது வேதமாகவும் - உலக வேதமாகவும் - இறுதி வேதமாகவும் குர்ஆனை இறைவன் வெளிபடுத்தி அதை பாதுகாத்து வருகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-116064542751444704?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/116064542751444704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=116064542751444704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116064542751444704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/116064542751444704'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/10/blog-post.html' title='குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது?'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-115937469671396511</id><published>2006-09-27T09:20:00.000-07:00</published><updated>2006-09-27T09:41:18.700-07:00</updated><title type='text'>இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? - 5</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிளில் சொல்லப்படாத குழந்தை அற்புதம்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுவரை வந்த நான்குத் தொடர்களில் இயேசுவின் தாயார் மரியாள் எந்த ஆணும் தீண்டாத நிலையில் கர்ப்பம் தரிக்க தயாராக வேண்டிய அவசியத்தையும், மன ரீதியாக அவரை இறைவன் தயார் படுத்திய விபரத்தையும் கண்டோம். இனி பைபிள் கண்டுக் கொள்ளாத குர்ஆன் மிக அற்புதமாக சொல்லக் கூடிய இயேசுவின் பால்ய நிலையைக் காண்போம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தை தன் தாயின் களங்கத்தை துடைத்தெறியும் விதமாகவும், தன்னைப் பெற்றெடுத்தத் தாய் எத்துனை புனிதமானவள் என்பதையும் காலாகாலத்திற்கும் மக்கள் விளங்கும் விதத்தில் அற்புதம் செய்தது. ஆனால் இதைப் பற்றி பைபில் கண்டுக் கொள்ளவே இல்லை. ஏன் இந்த வித்தியாசம்? அதை அறிவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பைபிளில்.&lt;/strong&gt;&lt;br /&gt;18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத்தேயு அதிகாரம் 1) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;4. அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,&lt;/div&gt;&lt;div align="justify"&gt;5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா அதிகாரம் 2) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசுவின் பிறப்புப் பற்றி அதாவது மரியாள் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்த பொழுதுவரை உள்ள விபரங்களை மத்தேயும் - லூக்காவும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பம் தரித்தால் என்பதில் சுவிஷேசம் எழுதியவர்களுக்கு மத்தியில் ஒத்த கருத்து உள்ளது. இனி குர்ஆன் இதுபற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்து விட்டு வருவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குர்ஆனில்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வானவர்கள் (மரியாளி)மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இது மரியமுக்கு (மரியாளுக்கு) சொல்லப்பட்ட சுப செய்தியாகும். இப்படி நடக்க வாய்ப்புள்ளதா.. என்ற சந்தேகம் மரியமுக்கு (மரியாளுக்கு) ஏற்படுகின்றது. அந்த சந்தேகத்தை அவர் வெளிபடுத்தவும் செய்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இறைவன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் இரு செய்திகளை சொல்கிறான். ஏற்கனவே ஜகரிய்யா வீட்டில் வளர்ந்த மரியம் அவர்கள் உளவியல் ரீதியாக தயாராகி இருந்ததை முந்தைய தொடர்களில் கண்டோம். அதோடு சேர்த்து இறைவனின் இரு சந்தோஷமான செய்திகளும் மரியமை (மேரியை) அடைகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;1) உலகப் பெண்களில் அவர் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (அல் குர்ஆன் 3:42)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2) குழந்தையால் ஏற்படும் சிறப்பும் பாதுகாப்பும்.&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(உமக்கு பிறக்கும் குழந்தையாகிய அவர்) தொட்டில் பருவத்திலும் இளமையிலும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார். (அல் குர்ஆன் 3:46)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த உரையாடல்கள் நடந்தப்பின்பு மரியம் கர்ப்பம் தரிக்கிறார். இறைவனின் வல்லமையை அவரது கர்ப்பப்பை உணர்கின்றது. காலங்கள் நகர்கின்றன. மரியமின் கர்ப்பம் அவர் வளர்ந்த வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில் அதே வீட்டில் மாதவிடாயெல்லாம் நின்று போய் கிழட்டுத் தன்மை தட்டி விட்ட ஜகரிய்யாவின் மனைவி (எலிசபத்து)க்கு யஹ்யா என்ற மகன் பிறந்துள்ளார். கணவனும் மனைவியுமாக இருப்பதால் அவர்களின் குழந்தையை அவர்கள் வாழ்ந்த பகுதி மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த வயதில் குழந்தை பிறந்தாலும் இறைவனின் வல்லமை என்று அந்த மக்கள் விளங்கி இருப்பார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால் மரியமைப் பொருத்தவரை அந்தப் பகுதி மக்களுக்கு இந்த நம்பிக்கை வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் எந்த மனித கண்ணும், மனமும் அதை வேறுவிதமாகத்தான் நோக்கும். அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள். அந்த இடத்தின் நிகழ்வுகளை குர்ஆன் சொல்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ''நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். ''கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். ''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்)நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக! (அல் குர்ஆன் 19: 22-26)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதுவரை நாம் கண்ட சம்பவங்களில் பெரிய அளவிளான கருத்து வேற்றுமைகள் எதுவும் இல்லை. மரியமுக்கு மனம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவரைப் பற்றி குர்ஆன் எங்கும் குறிப்பிடவில்லை. குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்.&lt;br /&gt;இனி பைபிள் கண்டுக் கொள்ளாத, குர்ஆனில் மட்டுமுள்ள இயேசுவின் முதல் அற்புதத்தையும் அதனால் மரியாளுக்கு ஏற்பட்ட உலகச் சிறப்பையும் பார்ப்போம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையுடன் தன் சமூகத்திற்கு மரியம் திரும்பினார். திருமணமாகாத ஒரு கன்னிப் பெண் அதிலும் நல்லக் குடும்பத்தில் பிறந்தப் பெண் கைக்குழந்தையுடன் வருவதைக் கண்ட அந்த பகுதி மக்கள்,&lt;br /&gt;.(பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். &lt;span style="color:#3333ff;"&gt;''மர்யமே! விபரீதமான ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே?'' என்று அவர்கள் கேட்டனர். (அல் குர்ஆன் 19:27)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;span style="color:#3333ff;"&gt;''ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை'' (என்றனர்)( அல்குர்ஆன் 19:28).&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3333ff;"&gt; அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! ''தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள் (அல் குர்ஆன் 19:29).&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அந்தப் பகுதி மக்கள் வெளிபடுத்திய வார்த்தைகளிலிருந்து மரியாளின் குடும்பம், அவர் வளர்ந்தக் குடும்பம் எத்துனை கண்ணியமான குடும்பமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். அத்தகைய சிறப்பான குடும்பத்தில் பிறந்த - வளர்ந்த ஒரு கன்னிப் பெண் திருமணம் ஆகாத நிலையில் கையில் குழந்தையுடன் வந்து நிற்கிறார். இப்போது அந்த மக்களின் தூற்றலுக்கும் நக்கல் பேச்சுக்கும், குத்தலுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும? அந்த சந்தர்பத்தில் 'தான் குற்றமற்றவள்' என்று மரியாள் எத்துனை வலுவாக வாதாடினாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல என்றைக்கும் எவரும் அந்த வார்த்தையை பொருட்படுத்தவே மாட்டார்கள். ஏனெனில் உலக நடப்பும் சூழ்நிலையும் அப்படி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மரியம் தன் நிலையை எவ்வளவு விளக்கினாலும் அதை பிற மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் தான் இறைவன் மரியாளை 'நீ பேச வேண்டாம்' என்று சொல்லி விட்டான். அந்த சந்தர்பங்களில் மரியாள் பேசுவது அர்த்தமற்றதாகவே கருதப்படும். 'தவறையும் செய்து விட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, எப்படி வீண் விதண்டாவாதம் செய்கிறாள்' என்றுதான் சமுதாயம் தூற்றும். அதனால் அந்த சந்தர்பத்தில் மரியம் வாய் மூடி மெளனமாக இருப்பதே அறிவார்ந்த செயலாகும். இறைவன் மிகத் தெளிவாக இதை மரியாளுக்கு உணர்த்தி விட்டான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தான் குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது தான் பெற்ற குழந்தை அதை உலகிற்கு உணர்த்தும் என்பதை இறைவனின் அறிவிப்பால் உணர்ந்திருந்த மரியாள் அந்த மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக குழந்தையின் பக்கம் செய்கை செய்கிறார். மரியமுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்த அந்த மக்களுக்கு ஆச்சரியம். நாங்கள் உன்னிடம் கேள்விக் கேட்டால் நீ குழந்தையை காட்டுகிறாயே.. தொட்டில் குழந்தையிடம் நாம் எவ்வாறு பேசுவோம்? என்று கேட்கிறார்கள். அப்போதுதான் அந்த அற்புதம் நடக்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரியம் சுமந்து வந்த அந்தக் குழந்தைப் பேசுகின்றது.&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நான் கர்த்தரின் அடிமையாக இருக்கிறேன்.&lt;br /&gt;அவர் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கி இருக்கிறார்.&lt;br /&gt;நான் எங்கிருந்தாலும் என்னைப் பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கி இருக்கிறார்.&lt;br /&gt;நான் உயிருடன் இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுதுவருமாறும், ஜக்காத் (என்ற பொருளாதார பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலவும் என்று அந்தக் குழந்தைக் கூறிற்று. (அல் குர்ஆன் 19:30,31,32,33) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பச்சிலங்குழந்தையான இயேசு தனது முதல் பேச்சிலேயே ஏராளமான விபரங்களை கூறியுள்ளார். அதை அறியுமுன் பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகில் எங்குமே இதுவரையும் நடக்காத ஒரு அற்புதத்தை இயேசுவின் குழந்தைப் பருவம் அதிலும் பிறந்த சில நாட்களில் நடத்துகின்றது. இதை பைபிள் கண்டுக் கொள்ளவில்லை. திருமணமாகத கன்னிப் பெண் குழந்தைப் பெற்றெடுக்கிறாள் என்றால் நிச்சயம் சமூகம் தூற்றவே செய்யும். மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில் நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மரியாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் என்ற செய்தி சாதாரண ஒன்றல்ல. பைபிளின் வரலாறுபடி மரியாளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப் என்ற கணவர் திருமணத்திற்கு முன் தனக்கு பேசிவைத்திருந்த பெண் கர்ப்பம் தரிக்கிறாள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவளை தள்ளி விட (திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட வேண்டும்) என்று மனதிற்குள் எண்ணிய விபரத்தை பைபிள் கூறுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;18 மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (மத்தேயு) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்நிலையில் தான் தேவத்தூதர்கள் யோசேபை சந்தித்து மரியாளின் நிலவரத்தைக் கூறுகிறார்கள். யோசேபு பிறகு சமாதானமடைகின்றார். யோசேபின் நிலையே இதுவென்றால் ஊர் மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர் மக்களைப் பற்றி பைபிள் கண்டுக்கொள்ளவே இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசுவின் சிறப்பையும், மரியாளின் கற்பொழுக்கத்தையும் திருக்குர்ஆன் மட்டுமே உலகிற்கு தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு வளர்ந்து பெரியவராக ஆன பின் செய்த பல அற்புதங்களை விட பச்சிலங்குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம் தான் மிகப் பெரியதாகும். வளர்ந்தப்பின் செய்யுமம் அற்புதங்களுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விடலாம். இயேசுவின் அற்புதம் உட்பட பல இறைத்தூதர்களின் அற்புதங்களுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் வெவ்வேறு அற்புதம் கற்பித்தார்கள் என்பது பைபிள் உட்பட கூறும் வரலாற்று உண்மையாகும். அதே சமயம் குழந்தை செய்யும் அற்புதத்திற்கு யாரும் வேறு அர்த்தம் கற்பிக்க முடியாது. அது கலப்படமற்ற அற்புதமாகவே உலகிற்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இயேசுவின் குழந்தைப்பருவத்தில் நிகந்து அவர் அந்தப்பகுதி மக்களிடம் பேசியதாகும். இந்தப் பேச்சு அவரை இறைத்தூதர் என்றும் அவரது தாயார் மரியாள் கற்பு நெறித் தவறாத தூய்மையான பெண் என்றும் உலகிற்கு உணர்த்தியது. இன்றுவரையிலும் உலகின் இறுதிநாள் வரையிலும் அந்த அற்புதம் குர்ஆனில் பேசப்படுகின்றது. இந்த அற்புதத்தை பைபிள் கண்டுக்கொள்ளவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இயேசுவின் முதல் பேச்சு குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது என்று குர்ஆன் சொல்லும் போது பைபிள் முதல் பேச்சை எப்படி சொல்கின்றது என்பதைப் பாருங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவருக்கு பனிரெண்டு வயதானபோது அவர்கள் அந்த பண்டிகை முறைமையின் படி எருசலேமுக்குப் போய்.......அப்போது அவருடைய தாயார் அவரை நோக்கி மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோட உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர் 'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார். (லூக்கா 42-49) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிளின் நான்கு சுவிசேசக்காரர்களின் தொகுப்பிலும் இயேசுவின் முதல் பேச்சு இந்த இடத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இயேசு தனது பணிரென்டு வயதுக்கு முன் பேசிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பைபிளை மட்டுமே நம்பிக்கொண்டு திருக்குர்ஆன் பற்றிய எந்த சிந்தைனையுமில்லாத கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுவின் சரியான வரலாறு எங்கு கிடைக்குமென்று. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குழந்தைப் பருவத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் அதன் ஆழம் அதிலிருந்து வேறுபடும் இன்றைய கிறிஸ்த்துவம் இனி அதுபற்றிப் பார்ப்போம். இறைவன் நாடட்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பரங்கிப்பேட்டை ஜி.என்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-115937469671396511?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/115937469671396511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=115937469671396511' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/115937469671396511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/115937469671396511'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/09/5.html' title='இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? - 5'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-115725638408583732</id><published>2006-09-02T20:45:00.000-07:00</published><updated>2006-09-02T21:06:24.130-07:00</updated><title type='text'>முஸ்லிம்களின் இறைவனா..!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா..!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;(ஜி.நிஜாமுத்தீன் - பரங்கிப்பேட்டை)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை' என்றக் கொள்கையை ஏற்று அதன் படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல்.  இந்தக் கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டாலும் இந்தக் கொள்கை சரியானதுதான் என்று கருதுபவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;'வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை' என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் 'லா இலாஹ இல்லா அல்லாஹ்' என்று வரும்.  இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் 'முஸ்லிம்' என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.  முஸ்லிம் என்ற அரபு வார்த்தையை தமிழ்படுத்தினால் 'கட்டுப்பட்டவர்' என்று பொருள் வரும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தக் கொள்கையாளர்கள் தங்கள் வணக்கங்களிலும், தங்கள் இறை நினைவுகளிலும், அந்தக் கொள்கையைப் பற்றிப் பேசும் போதும் அந்தக் கொள்கையின் அரபு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையில் 'அல்லாஹ்' என்ற பதம் வருவதால் அல்லாஹ் என்ற அந்தக் குறியீடு தனிக் கடவுளை குறிக்கும் ஒரு சொல் என்றும், முஸ்லிம்கள் தனிக் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் பிறர் விளங்கிக் கொள்கின்றனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ள ஒரு நாட்டில் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மொழியின் வார்த்தை ஒரு சாரார் பயன்படுத்தப்படும் போது அது வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிறிஸ்த்தவர்கள் வணங்கும் இயேசுவைப் பொருத்தவரை மொழிக்கு ஏற்றார்போல அந்த வார்த்தை மாற்றப்பட்டு புழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்றும், அரபுவில் ஈஸா என்றும், தமிழில் இயேசு என்றும் இடத்திற்கு தகுந்தார்போல அவரது பெயர் மாற்றப்பட்டு விட்டதால் கிறிஸ்த்தவர்கள் இயேசுவென்று தமிழில் குறிப்பிடும் போது பிறர் அதை பளிச்சென்று புரிந்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை அவ்வாறு எல்லா சந்தர்பங்களிலும் அல்லாஹ் என்பதை மொழியாக்கம் செய்வதில்லை. (இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன) அல்லாஹ் என்றே குறிப்பிடுவதால் அல்லாஹ் என்பது ஒரு இணத்தின், ஒரு கொள்கையின் கடவுளை குறிக்கும் சொல் என்ற நிலையைப் பெற்று விட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது வருந்தத்தக்க ஒன்றுதான், ஏனெனில் ஒரு மொழியில் பலவீனம் அல்லது மொழி இடைவெளிகளின் காரணத்தால் மிகப் பெரிய ஒரு பொதுக் கொள்கை தவறாக புரியப்படுவது வருந்தத்தக்கதுதான். இந்த தவறான புரிதல் அக்கறையுள்ள முஸ்லிம்களின் மீது கூடுதலான விளக்கும் சுமையை? ஏற்படுத்தியுள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;'மிகப் பெரியக் கொள்கை' அலட்சியப்படுத்தாமல் பரிசீலியுங்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. &lt;span style="color:#3333ff;"&gt; ''பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)''&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறலாம். ஒருவேளை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் அரபு தேசத்தில் இல்லாமல் தமிழகத்தில் - தமிழ் மொழியில் வெளிப்பட்டிருந்தால் இங்கு நிலவி வந்த பல இறைக் கொள்கையை சீர் திருத்தி ஒரே இறைவன் என்ற அந்த மாபெரும் சக்தியை புரிய வைத்து அதன் பக்கம் மக்களை மீட்டெடுத்திருப்பார். அப்போது அவரது கொள்கை அரபுவில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழில் முஹம்மத் அவர்கள் யாரை இறைவன் என்று குறிப்பிட்டார்களோ அது அரபுவில் அல்லாஹ் என்று மொழி பெயர்க்கப்படும். இதிலிருந்து அல்லாஹ் என்பது தனிக் கடவுளை குறிக்கும் சொல் அல்ல மாறாக பொதுக் கடவுளை குறிக்கும் சொல் என்பதை விளங்கலாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தமிழில் பிரம்மன், விஷ்னு, முருகன் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும்,  இறைவன், கடவுள் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் விளங்கலாம். முந்தைய சொற்கள் தனிப்பட்டதையும் பிந்தைய சொற்களான இறைவன், கடவுள் என்பது பொது சக்தியையும் குறிப்பதாக எப்படி விளங்கிக் கொள்கின்றோமோ அதைப் போன்று தான் அல்லாஹ் என்பதும் எல்லோருக்கும் பொதுவான அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போது இறைவனைக் குறிக்கும் ஒரு அரபு சொல்லாகும். அதனால் தான் பொதுக்கடவுளை ஏற்றுக் கொண்ட அரபு மொழி பேசக் கூடிய யூதர்கள், கிறிஸ்த்தவர்கள் கூட இறைவனை அல்லாஹ் என்றே குறிப்பிடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாம் எந்த ஒரு தனிக் கடவுள் கொள்கையையும் வகுக்கவில்லை மாறாக அது எடுத்தக் காட்டுவது பொதுக் கடவுள் கொள்கைதான் என்பதை சந்தேகமற விளங்க வேண்டும். பின்னர் சற்று அது கூறும் அந்தக் கொள்கையின் உள்ளே நுழையுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சக்தியும் - வடிவமும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பொதுவாக சக்தி அல்லது ஆற்றல் போன்றவற்றை வடிவப்படுத்தி மனிதன் அனுபவிப்பதில்லை. காற்று என்பது ஒரு ஆற்றல். அதை அனுபவிக்க காற்றுக்கு உருவம் வேண்டும் என்று எந்த மனிதனும் முடிவு செய்வதில்லை. ஒளி என்பது ஒரு சக்தி. ஒளிக்கு உருவம் வடிவம் கொடுத்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும் அனுபவிக்க முடியும் என்று எந்த அறிவும் நம்பிக்கையும் கூறுவதில்லை. வெப்பம் என்பது கூட ஒரு சக்தி. அதை உருவப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று எந்த மனிதனும் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்ற சக்தி அனுபவிக்க மனிதன் விரும்பியவாறெல்லாம் உருவப்படுத்திக் கொள்கிறான். பிற இறைக் கொள்கையில் உள்ள பலவீனங்களில் ஒன்று கடவுளை உருவப்படுத்துவது. (இறைவன் உருவமற்ற வெறும் சூனியம் அல்ல. இறைவன் அவனுக்கே உரிய உருவ அமைப்போடு இருக்கிறான். அவனது உருவத்தை யாரும் இதுவரை கண்டதில்லை என்பதால் இந்தப் பரம்பொருளை உருவப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது)&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மனித கற்பனை, கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆன்றோர்கள் முதல் சான்றோர்கள் வரை எவருமே கடவுளை கண்களால் கண்டதில்லை என்பதால் தான் கடவுளாக கருதப்படும் வடிவங்கள் பெருத்த அவலங்களைப் பெற்றுள்ளன. கடவுளாக கருதப்படும் சிலைகளை பற்றி சிந்திக்கும் எந்த அறிவும் இது கடவுளை கொச்சைப்படுத்தும் போக்கு என்பதை விளங்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதன் அவனுக்குத் தேவையானவற்றை மிக்க அழகுடன் வடிவமைக்கவே விரும்புகிறான். வீடு கட்ட விரும்பும் எந்த மனிதனும் கற்களை அடுக்கி கட்டி விட்டால் போதும் வீடாகி விடும் என்று முடிவு செய்வதில்லை. பொறியியளாளர்களின் ஆலோசனைப்படி வீட்டை அழகுற அமைக்கிறான். ஒரு ஓவியன் தனது ஓவியத்தை அசிங்கமாகவும் அவலட்ஷனமாகவும் வரைய விரும்புவதில்லை. புகைப்படக்காரர்கள் பார்த்தவுடன் முகம் சுலிக்கும் விதத்தில் அகோரமான புகைப்படங்கள் எடுப்பதில்லை. அவனது தேவைகளுக்காக அழகுணர்ச்சியை நாடும் மனிதன் கடவுளை கற்பனை செய்யும் போது மட்டும் எவ்வளவு கேவலமாக அதை வடிவமைத்துக் கொள்கிறான் என்பதை பார்க்கும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள், மிருகங்களுக்குள்ள கோறப்பற்கள், யானைத்தலையும் பெருத்த தொப்பையும் கொண்ட உருவம்.  கருத்த, தடித்த நிறத்தில் பயங்கர உருவங்கள் என்று எத்துனை வித அகோரங்கள்!. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தனது குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளுடன் குழந்தை பிறந்தால் கடவுளின் வடிவம் என்று அதை ஆபரேஷன் செய்யாமல் விட்டு விடுவார்களா..? கோரப் பற்களுடன் குழந்தைப் பிறந்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா..? இறைவனாக கருதப்படும் உருவங்களுக்கு ஏன் இந்த அவலங்கள்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மேல் தட்டு மக்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் வழிபடும் சிலைகளிடம் இத்தகைய அகோரங்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தாழ்ந்த மக்களாக அவர்கள் கருதுபவர்களின் சிலைகளின் வடிவங்கள் கூட தாழ்ந்தவைகளாகவே இருக்க வேண்டும் என்ற ஜாதிய வெறிப்பாடே இவற்றிற்கு காரணம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இறைவன்(அல்லாஹ்)வாகிய அவனுக்கு இந்த அவலட்சனங்கள் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கல்லை கடவுளாக உருவப்படுத்திக் கொள்பவர்கள் அதை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதைப் பார்க்கிறோம். சாதாரண நடைமுறைக்கு கூட சாத்தியமில்லாத தத்துவத்தை மகாப் பெரிய பொதுக் கடவுள் கொள்கைக்கு பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அறிவாளிகளால் இதை எப்படி சரிகாணமுடியும் என்பதும் விளங்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தத் தத்துவத்தை சரிகாண்பவர்களின் வீட்டை ஒருவன் பார்த்து 'இது உன் வீடென்றால் உன் வீடு, என் வீடென்றால் என் வீடு' என்று கூறினால் மிக அழகான தத்துவம் அதனால் நீ விரும்பினால் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடு' என்று சொல்வார்களா..? சிலைகள் என்றைக்கும் சிலைகளாகத்தான் இருக்கும் அவை ஒரு போதும் தன் நிலையிலிருந்து உயர்வுப் பெறாது. வேண்டுமானால் நாளடைவில் அது தனது புதிய பொலிவை இழக்கலாம் அதைத்தவிர வேறெந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஊனமான பல சிலைகள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதைக் கூட பார்க்க முடியும். வித விதமாக பல சிலைகளை வடிவமைத்து தூக்கி ஆடிபாடி கடலில் கரைத்து விட்டு கடவுளை கண்ணியப்படுத்தி விட்டதாக மகிழ்கிறார்கள். உண்மையான இறைவனை இப்படியெல்லாம் செய்ய முடியுமா...? அல்லாஹ் என்ற அந்த இறைக் கொள்கை இவற்றிர்க்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிந்தனையின் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏன் பல இறைவர்கள் வேண்டும்?எதற்காக, எந்த அடிப்படையில் இந்த மக்கள் பலக் கடவுள்களை நாடுகிறார்கள் அதற்கு என்ன அவசியம் என்பதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;திறமைமிக்க எந்த ஒரு மனிதனும் தன் திறமை தனித்துவத்துடன் வெளிப்படுவதையே விரும்புவான். தனது திறமையையும், உழைப்பையும், உலகம் மிகச் சரியாக கண்டுணர வேண்டுமானால் தாம் தனித்துவத்துடன் வெளிப்படவேண்டும் என்றே ஆசைப்படுவான். அப்படி வெளிப்பட்டவர்கள் தான் உலகில் மிளிர்கிறார்கள்.மிகச் சிறந்த, திறமைவாய்ந்த ஒரு கட்டிடப் பொறியாளர் தன்னுடைய திறமையால் ஒரு கட்டிடம் உயர்வதையே விரும்புவார். கூட்டு வைத்துக் கொண்டு தனது திட்டத்தை உருவாக்க மாட்டார். புகழ் மிக்க ஓவியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது கூட்டாக ஓவியம் வரைந்து அந்தப் புகழை அடைந்தார்களா..? இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். பலவீனங்கள் அடங்கிய மனிதனே ஒற்றையில், ஒற்றைப்பாட்டில் இத்துனை உயர்வுப் பெறும் போது பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனைக் கற்பனை செய்பவர்கள் மனிதனின் ஆற்றலை விட கடவுளின் ஆற்றல் குறைந்தது என்று எண்ணுகிறார்களா..?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;சீர்மை சிதையும் என்பது உறுதி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முழு உலகையும் நீங்கள் உங்கள் சிந்தனை திரையில் கொண்டு வந்து விரியுங்கள். எந்த நாட்டிலாவது சம அதிகாரம் பெற்ற இரண்டு ஜனாதிபதிகள், இரு பிரதமர்கள் இருக்கிறார்களா...! அரசுத் துறைகள் எதுவொன்றிலும் சம அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்டு பணியாற்றுகிறார்களா...? ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் இருந்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள். இந்தக் கேள்விகளையும் தங்களுக்குத் தாங்களே சற்றுக் கேட்டுப் பார்க்கட்டும். ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்கள், இரு ஜனாதிபதிகள் இருந்தால் என்னத் தவறு?பள்ளிக் கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு இரு தலைமை ஆசிரியர்கள் இருந்தால் என்னத் தவறு? ஒரு வீட்டுக்கு இரு குடும்பத்தலைவர்கள் இருந்தால் என்னத்தவறு? இங்கெல்லாம் இருமை இருந்தால் என்னத் தவறு ஏற்படுமோ அதை விட பயங்கரம் இருக் கடவுள்கள் இருந்தால் ஏற்படும். இதை இறை வேதமாகிய குர்ஆன் இப்படிக் கூறுகிறது.வானங்கள், பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டுக் கடவுள்கள் இருந்திருந்தால் அவை சீர்கெட்டு சின்னாபின்னமாகி இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை. எதுவொன்றும் ஒரே சீராக இயங்கவேண்டுமானால் அது ஒரு அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும். நாடும் வீடும் சிறக்க ஒருமையே சரியானத் தீர்வு எனும் போது மொத்த உலகிற்கும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டக் கடவுளைக் கற்பனைச் செய்கிறீர்கள்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு பெரியக் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை என்றால் தங்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்து அந்தக் காரியத்தை சாதிப்பார்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டாச்சிகளை இதற்கு உதாரணம் கூறலாம். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை தங்களுக்கு இருந்தாலும் அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்பதால் பிறரை நாடி கூட்டணி வைத்துக் கொண்டு நாடியதை சாதிக்கிறார்கள். (இந்தக் கூட்டணிகளில் பிரச்சனை உருவாகி முட்டி மோதிக் கொள்வது தனி விஷயம்)இப்போது சிந்தியுங்கள். இறைவர்களும் கூட்டாச்சி நடத்த வேண்டுமென்றால் இறைவர்களிடமும் மனித பலவீனங்கள் இருக்கின்றனவா..? இப்படி சிந்திப்பது கடவுளை பலவீனப்படுத்துவதாகாதா...? பலவீனத்திற்குட்பட்டவ(ர்)ன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? பல கடவுள் சித்தாந்தக்காரர்கள் நிதானமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையான அந்தப் பரமசக்தி (அல்லாஹ்)க்கு எத்தகைய கூட்டு இறைவர்களும் தேவையில்லை. ஏனெனில் அவன் அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பல கடவுள்கள் - பல மனிதர்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் கலந்து ஒரு மனிதன் உருவாகின்றான். அந்த உருவாக்கம், கருவரையின் குடியிருப்பு, பிறக்கும் முறைகள், பால்யப் பருவம் என்று உலகில் பிறக்கும் கோடானக் கோடி குழந்தைகளும் ஒரே விதத்தில் பிறக்கும் போது பின்னர் ஜாதியம் என்ற கொடிய நோய் அந்தக் குழந்தையோடு வந்து ஒட்டிக் கொள்கின்றது. மிக சொர்ப்பமானவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள், அதிகமானவர்கள் தாழ்ந்தவர்களாகின்றார்கள். மனிதத்துவம் சிதைந்து ஏற்றத்தாழ்வு உருவாகி நிலைப் பெற்று விட்டது. இதற்கு என்னக் காரணம்? பலக் கடவுள் கொள்கையே இந்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பலக் கடவுள் கொள்கையை கைக் கழுவுவதேயாகும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;விண்ணுலகம், மண்ணுலகம் என்று அனைத்துலகத்திற்கும் ஒரே இறைவன் என்ற நிலை வரும் போதுதான் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சம அந்ததஸ்த்துள்ளவர்களாவார்கள். அதை மிக வலுவாக உலகில் நிலை நிறுத்திக் காட்டியது இஸ்லாம் ஒன்றுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனித சகோதரர்களே.. கூண்டுகளிலும், முட்களிலும் சிறைப்பட்டு கிடக்கும் உங்கள் சிந்தனைச் சிறகுகளை அவற்றிலிருந்து விடுவித்து சற்று அகலமாக விரித்து பறக்க முயலுங்கள். அகன்ற வானவீதி அனைத்தையும் ஆளும் அந்த மகா இறைச் சக்தி உங்களுக்குப் புலப்படும். கடுகளவுக் கூட பலவீனமில்லாத அந்த மகா இறைச் சக்தியே உண்மையான இறைசக்தி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனல்ல. அவனே அனைத்துலகுக்கும் சொந்தமானவன். அந்த மகா சக்தியை அரபுமொழியில் 'அல்லாஹ்' என்று குறிப்பிடுகிறோம். இறைவன் என்று குறிப்பிடுங்கள், கடவுள் என்று குறிப்பிடுங்கள் அதில் எந்தத் தடையும் இல்லை. மனிதக் குலம் விடுதலைப் பெற வேண்டுமானால் அந்த ஓரிறைக் கொள்கைக் குறித்து சிந்திப்பது ஒன்றே சரியான வழியாகும். இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் பக்கம் உங்களை அழைக்கின்றோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-115725638408583732?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/115725638408583732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=115725638408583732' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/115725638408583732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/115725638408583732'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/09/blog-post.html' title='முஸ்லிம்களின் இறைவனா..!'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33228447.post-115652448834350637</id><published>2006-08-25T09:29:00.000-07:00</published><updated>2006-08-30T14:44:43.883-07:00</updated><title type='text'>ஜும்ஆ மேடைகள் பயனற்றுப்போவதேன்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;மனிதனின் அறிவார்ந்த மாற்றங்களுக்கும் அரசியல் பொருளாதார மற்றும் கலை இலக்கிய ரீதியான மாற்றங்களுக்கும் முழு முக்கிய பங்கு வகிப்பது பேச்சுக்கலையும் எழுத்துக்கலையுமாகும். எவ்வித தடையுமின்றி மனிதனின் உள்ளத்தை ஊடுருவி சென்று அவனிடம் மாற்றத்தையும் செயற்பாடுகளையும் ஏற்படுத்துவது பேச்சுக் கலையேயாகும். மனித சமுதாயம் நல்வழியிலோ அல்லது தவறான வழியிலோ இயங்குவதற்கு பேச்சுக் கலையே முதலிடம் வகிக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுக்கலை என்பது இறைவன் மனிதனுக்கு செய்த அருள் என்று இறைவன் தனது வேதத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்&lt;span style="color:#3366ff;"&gt;.(அருளாளனாகிய இறைவனே) மனிதனைப் படைத்தான்.(மனிதனுக்கு) அவனே பேச்சுக் கலையை கற்றுக் கொடுத்தான்.(அல் குர்ஆன்,55:4-5)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மனித அறிவும் அவன் சிந்தனையும் விரிவடைகின்றபோது பேச்சுத் துறைக்கான தேவையும் அதிகரிக்கும் என்பதை எவரும் மறுக்க மாட்டார். இஸ்லாம் எக்கால சூழலுக்கும் வழிகாட்டும் மார்க்கம் என்பது உண்மையாகும் போது அந்த வழி காட்டல்கள் மனித சமுதாயம் முழுமைக்கும் முன் வைக்கப்பட வேண்டும். இதை சிந்திக்கும் போது மக்களை சென்றடையும் பிரச்சார ஊடகங்களை வலுவாக பயன்படுத்துவதின் அவசியம் உணரப்படும். தீமைகளுடன் மிகப் பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற போதனையை உணர்த்தியே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் இதை அவனுக்கு தங்கு தடையின்றி நினைவூட்டும் வழிகளை இஸ்லாம் காட்டியுள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பது ஜூம்ஆ பள்ளிகளின் பிரச்சார மேடைகளாகும். எனவேதான் இஸ்லாம் அனைத்து முஸ்லிம்களும் இறை இல்லங்களின் பிரதி வெள்ளிக் கிழமைகளில் ஒன்றுக்கூடி இறைவன் வகுத்துள்ள வாழ்க்கை நெறி பற்றிய போதனைகளை பிரச்சாரத்தின் வழியாக செவியேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினங்களின் பிரச்சாரத்தை முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்றாகவும் இஸ்லாம் ஆக்கியுள்ளது. இதை விவரிக்கும் இறை வசனத்தைப் பற்றி சிந்திக்கும் போது பிரச்சாரத்திற்காக இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள ஜூம்ஆ மேடைகளின் ஆழம் நமக்கு தெளிவாகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;span style="color:#3366ff;"&gt;'இறை நம்பிக்கையாளர்களே! ஜூம்ஆ தினத்தில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் இறைவனை நினைவுக்கூருவதற்காக நீங்கள் (பள்ளிகளுக்கு) விரைந்து வாருங்கள். (நீங்கள் வியாபாரிகளாக இருந்தால்) வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு சிறந்தது' (குர்ஆன்,62:9)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) இறைவனை நினைவுக்கூற பள்ளியை நோக்கி விரைதல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2) இது அறிவோடு சம்பந்தப்பட்ட முக்கிய விஷயமாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இறை நினைவை மேம்படுத்தி-அறிவாளியாக இறை நம்பிக்கையாளனை உருவாக்கும் பணி ஜூம்ஆ தினத்தில் பொதிந்துள்ளது. இறைவன் மனிதனிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்புகளெல்லாம் அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக மிளிர துவங்கிய அற்புதம் ஜூம்ஆ மேடைகளை சரியாக பயன் படுத்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்துள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இறைத்தூதர் முஹம்மத் -ஸல்- அவர்கள் சந்தித்த ஜூம்ஆ மேடைகள் இதற்கான சான்றுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சந்தித்த மேடைகள் முழுக்க முழுக்க குர்ஆனை-அதன் போதனைகளை- தத்துவங்களை - அரசியல் சட்டங்களை - பெண்ணுரிமைகளை - தனிமனித ஒழுங்குகளை - சமூக பிணைப்பை - பொருளாதாரத்தை - மரணத்தை-மறுமையை - மீண்டும் எழுப்பப்படுதலை - விசாரணை மன்றத்தை - அந்த சந்தர்பத்தில் நிகழும் மகா கொடுமையான சம்பவங்களை - நல்லவர்களும் தீயவர்களும் தனித்தனியாக சந்திக்கப்போகும் சொர்க்கம் நரகம் என்ற முடிவில்லா பெரு வாழ்வை இவை அனைத்தையும் அங்கு உட்கார்ந்திருப்போர்களின் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தாமதிக்காமல் அதை நோக்கி செயல்படும் உத்வேகத்தை கொடுக்கும் - இறை மீடியாவாக - அமைந்திருந்தது. நபிமார்களின் வரலாறுகள், அவர்கள் இறைவழியில் பாடுபட்டபோது ஏற்பட்ட சோதனைகள், அதை அவர்கள் சந்தித்த விதங்கள், இறை போதனைக்கெதிரான ஷைத்தான்களின் சூழ்ச்சிகள்,  அதை முறியடிக்கும் விதங்கள் அதற்கான பயிற்சி போன்றவை விவாதித்து விளக்கப்பட்டன. இறையாட்சிக்கு எதிராக செயல்படும் அனைத்து வித வழிகேடுகளையும் துடைத்தெறியும் போராட்டத்தில் சில நேரம் ஆயுதம் ஏந்தும் சூழ்நிலை உருவாகும்.  (இறைவன் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய சில நபிமார்களின் வாழ்வில் இத்தகைய சூழ்நிலை சில சந்தர்பங்களில் உருவானது) அத்தகைய நிலை உருவானால் அதை எதிர் கொள்ளும் இராணுவ வீரர்கள் எத்தகைய கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும்... மண்ணுக்கோ பொருளுக்கோ ஆசைப்படாமல் இறை திருப்தியை கைக் கொள்ளும் விதங்கள் யாவை... போன்ற முஸ்லிம் உம்மத்துக்குத் தேவையான எல்லாவித பயிற்சி போதனைகளும் ஜூம்ஆ மேடைகளிலேயே முழங்கப்பட்டன. இத்தகைய பேரெழுச்சி இறைத்தூதர் சந்தித்த ஜூம்ஆ மேடைகளிலும் அவர்களிடமிருந்து பயிற்சிப் பெற்றவர்களின் ஜூம்ஆ மேடைகளிலும் இருந்ததால் அன்றைய மக்களில் எவரும் ஜூம்ஆவை தவறவிடாமல் முன்கூட்டியே பள்ளிகளில் சென்று அமரும் நிலையை வரலாறுகள் சொல்கின்றன. கால கட்டங்கள் மாறி, சொல்ல விளங்காத காரணங்களால் முஸ்லிம்களின் சிந்தனைப் போக்கு மாற்றமடைய துவங்கியப்பின் ஜூம்ஆ மேடைகளின் நோக்கங்களும் சிதறடிக்கப்பட்டு விட்டன. கதைகளும் கற்பனைகளும் இன்றைய மேடைகளை அலங்கரிக்கின்றது. அறிவுக்கும் காலகட்டத்திற்கும் பொருந்தாத விஷயங்கள் அந்த மேடைகளில் பேசப்படுகின்றன. மன முரண்டான விதண்டாவாதங்கள் சத்தற்ற விவாதங்கள, உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் தாளாரமாக்கப் பட்டுள்ளன. என்றைக்கோ சிலர் எழுதிவைத்த புத்தகங்களை அரபியில் படிப்பது மட்டுமே ஜூம்ஆ நிறைவேறுவதற்கான விதி என்ற இடைக்கால மரபு வழி நம்பிக்கை மேடைகளில் நிற்பவர்களின் மனதில் ஆழமாக பதிக்கப் பட்டுவிட்டன. விளைவு, அரபி விளங்காத மக்கள் அயர்ந்து தூங்க முடிவு செய்து விடுகிறார்கள். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ஒரு காலத்தில் முஸ்லிம்களின் சிந்தனையை தட்டி எழுப்பி உலகத்திற்கு வழிகாட்டும் உத்வேகத்தை கொடுத்த மேடைகள் இன்று உறக்கத்தில் முஸ்லிம்களை ஆழ்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இஸ்லாமியத்தை கட்டி காப்பாற்றும் பொறுப்பு ஜூம்ஆ பேருரைகளுக்கு இருக்கிறது. இஸ்லாத்திற்கெதிரான சதி திட்டங்களை மேற்குலகம் தம்மிடம் முடங்கி கிடக்கும் மீடியாக்கள் மூலம் தங்கு தடையின்றி செயலாற்றி வருகின்றன. (உலகில் வன் கொடுமையான ஆட்சியாளர்கள் எவ்வளவோ இருக்கும் போது சத்தாம் ஹூசைனை மட்டும் பெரும் கொடுமையாளராக சமீபத்தில் மேற்கத்திய மீடியாக்கள் இராக்கை கைப்பற்றும் வரை தொடர்ந்து ஒளிபரப்பியதை இதற்கு உதாரணமாக கூறலாம்.) &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதை எதிர்த்து அதன் போலிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அதே போன்று மீடியாக்கள் - செய்தி ஊடகங்கள் நம்மிடம் இல்லை என்றாலும் அதைவிட பன்மடங்கு செய்திகளை வெளியில் எடுத்துச் செல்லும் உடனுக்குடனான மாற்றங்களை ஏற்படுத்தும் வாய் வழி செய்தி ஊடகங்களை - மீடியாக்களை - ஜூம்ஆ மேடைகளை இறைவன் முஸ்லிம் சமூகத்திடம் கொடுத்துள்ளான். இதை நாம் சரியாக பயன் படுத்தியிருந்தால் இஸ்லாத்திற்கெதிரான உலகளாவிய சதிகள் இந்த அளவிற்கு விரிந்து சென்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதைப்பற்றி எல்லாம் ஜூம்ஆ பிரசங்கம் செய்யும் இமாம்களால் சிந்திக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் கற்ற கல்வி முறை அப்படி. வாரந்தோரும் வெள்ளிக் கிழமைகளில் ஒரே நேரத்தில் நூற்றக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களை சென்றடையும் தனது கருத்துக்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், இன்றைய உலக நடப்பிற்குரிய இஸ்லாமிய தீர்வுகளை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும், ஜூம்ஆ நடக்கக்கூடிய ஊர்கள், அன்றைய நேரங்களில் அந்த ஊர் சந்திக்கும் பிரச்சனைகள் இவைகளைப் பற்றிய கருத்தாக்கங்களை எந்த முறையில் சொல்ல வேண்டும் போன்ற சிந்தனைகள் பெருவாரியான ஜூம்ஆ இமாம்களுக்கு எட்டுவதே இல்லை.  அதனால் தான் ஒரு சிறு விஷயம் குறித்து பல நாட்கள் பேசப்படுகின்றன. இறைவனை நினைவுக்கூற வருபவர்கள் - இத்தகைய ஜூம்ஆ உரைகளால் வெறுப்படைந்து அலுப்புடன் இல்லம் திரும்புகிறார்கள். இது எந்த நோக்கத்திற்காக இறைவன் பள்ளியை நோக்கி விரைய சொன்னானோ அந்த நோக்கத்தையே பாழ்படுத்தக் கூடியதாக அமைந்து விடுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜூம்ஆ உரைகள் பயனற்றுப்போவதற்கான காரணங்கள்:&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) ஜூம்ஆ உரை வெறும் சடங்காக மட்டுமே கருதப்படுவது. எந்த நோக்கத்திற்காக இந்த மேடை ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்தைத் துளியும் உணராமல் இது ஜூம்ஆவிற்குரிய சடங்கு எத்துனையோ பள்ளி இமாம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சடங்குகளை நிறைவேற்ற உயிரோட்டம் தேவையில்லை என்ற பொதுவான மனநிலைதான் வெள்ளி மேடைகளிலும் கடைப்பிடிக்கப் படுகின்றன. பள்ளி முழுவதும் நிறைந்து முஸ்லிம்கள் உட்கார்ந்திருந்தாலும் அவர்களின் மனங்கள் இந்த சடங்கிலிருந்து வெகு தொலைவு தள்ளி நின்று அந்த நேரங்களில் வேறு தனக்கு விருப்பமான சிந்தனையில் ஐக்கியமாகி விடுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;2)  பல பள்ளிகளில் ஜூம்ஆ உரை அதற்குரிய உணர்ச்சியை இழந்து வெறும் விரிவுரை தோரணையில் நிகழ்த்தப்படுவதால் பாமர மக்கள் அத்தகைய உரைகளிலிருந்து விடபட்டு விடுகிறார்கள். இறைத்தூதர் அவர்கள் ஜூம்ஆ உரை நிகழ்த்தும் போது அவர்களின் கண்களெல்லாம் சிவந்து விடும், குரல் உயர்ந்து விடும், ஒரு ராணுவ வீரருடைய தோரணை அங்கு தென்படும் என்றெல்லாம் அந்த ஜூம்ஆக்களை அனுபவித்த நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு செய்தியை விரிவுரை   தோரணையில்  பிரசங்கத்திற்குரிய மிடுக்கிலிருந்து மாறுபட்டு நிகழ்த்தும் போது உரையின் செய்திகள் ஓரளவு படித்தவர்களை மட்டுமே சென்றடையும். அவர்களல்லாத மற்ற அனைவரும் ஜூம்ஆ ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை பெற முடியாமலேயே வீடு திரும்புகின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;3) செய்தித் தாள்களையோ, இன்னப் பிற உலகியல் விஷயங்களையோ கற்றுணராத இமாம்கள் கருத்து வேறுபாடு தென்படும் மஸாயில் பிரச்சனைகளையே திரும்ப திரும்ப ஜூம்ஆ உரைகளில் பேசும் போது உட்கார்ந்திருப்பவர்கள் வெறுப்படையத் துவங்கி விடுகிறார்கள். உதாரணமாக குஜராத் போன்ற பக்கத்து மாநிலங்களில் முஸ்லிம்கள் பெறும் அவதிக்குள்ளாகிக் கொண்டிருக்கும் போது விரல் அசைத்தல் பற்றிய விவாதங்கள் ஜூம்ஆ மேடைகளில் பேசப்படுவது வந்திருப்பவர்களை எரிச்சலடைய செய்து விடுகிறது. ஜூம்ஆ உரைகள் பயனற்றுப் போவதற்கு இப்படி பலக் காரணங்களை சொல்லலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;கலாச்சாரம் - பொருளாதாரம் - ஆயுதப் போராட்டம் என்று பல திக்குகளிலும் முஸ்லிம்கள் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு வழி காட்டும் கூடுதல் பொறுப்பு ஜூம்ஆ மேடைகளில் நிற்பவர்களுக்கு (உண்டு) வேண்டும்.                      &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தப்  பொறுப்புணர்ச்சியை உணர்ந்தவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சில ஆலோசனைகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;1) உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகள். எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இவைகளை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2) சம காலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இடையூறுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான அறிவு மற்றும் ஆய்வு மனப்பான்மையைப் பெற்றிருப்பதும் இல்லையெனில் பெற முயற்சிப்பதும் கட்டாயம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;3) தாம் பணி செய்யும் ஊர்களில் இஸ்லாமிய சிந்தனைமிக்க இளைஞர்களை கண்டெடுத்து அவர்களோடு தம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்து அதன் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த சிந்தனையோட்டத்தை எடுத்து செல்லும் முயற்சிகளை மேற் கொள்ளுதல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;4) கால கட்டங்களுக்கு தகுந்த மாதிரி ஜூம்ஆ உரைகளை அமைத்துக் கொள்ளுதல் அதற்கான தயார் நிலையில் இருத்தல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;5) சொல்ல வேண்டிய பிரச்சனைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அழுத்தமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் கலையை வளர்த்துக் கொள்ளல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;6) தம் ஊர் மக்களின் புரியும் திறனை உணர்ந்து அவர்களுக்கு புரியும் விதத்தில் செய்திகளை இலகு படுத்துதல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;7) இறைவன் மீதான மறுமை மீதான நம்பிக்கையையும் தாக்கத்தையும் அழுத்தமாக பதிய வைக்க குர்ஆன் வசனங்களையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் நிறைய நிறைய ஜூம்ஆ உரைகளில் பயன் படுத்துதல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;8) சட்டங்களை விளக்கும் சூழ்நிலைகளில் அது பற்றிய அறிவை முடிந்த அளவிற்கு முழுமையாக பெற்றிருத்தல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;9) உலக வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை வேறுபடுத்திக் காட்டாமல் உலகத்தை வென்றெடுப்பதே மார்க்கத்தின் முக்கியப் பணி என்ற உண்மையை நபிமார்களின் வாழ்க்கையிலிருந்து மேற்கோள் காட்டி உரையை தொகுத்துக் கொள்ளல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;10) மிக முக்கியமாக, தாம் மதரஸாக்களில் கற்றுக் கொண்டக் கல்விதான் முக்கியமான முழுமையான கல்வி என்ற பிடிவாதமான மனநிலையை உடனடியாக மாற்றியமைத்து இன்னும் இன்னும் நிறைய கற்றுக் கொள்வோம் என்ற பரந்த மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளுதல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;11) முஸ்லிம்களுக்கு மத்தியில் பகையை ஊட்டி வளர்க்கும் எந்த பிரச்சனைக்கும் தம் உரைகளில் பேச்சுக்களில் அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஜூம்ஆ உரைகள் நிகழ்த்தப்பட்டால் அதுவே இஸ்லாம் ஜூம்ஆவில் எதிர்ப் பார்க்கும் தாக்கத்தை ஓரளவாவது ஏற்படுத்தும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;'இறை நம்பிக்கையாளர்களுக்கு உபதேசம் பயனளிக்கும்'&lt;/span&gt; என்ற குர்ஆன் வசனத்தை நினைவு கூர்ந்து இந்தக் கட்டுரையை முடிக்கிறோம். இறைவன் நேர்வழிக்காட்ட போதுமானவன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33228447-115652448834350637?l=idhuthanislam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://idhuthanislam.blogspot.com/feeds/115652448834350637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33228447&amp;postID=115652448834350637' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/115652448834350637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33228447/posts/default/115652448834350637'/><link rel='alternate' type='text/html' href='http://idhuthanislam.blogspot.com/2006/08/blog-post_25.html' title='ஜும்ஆ மேடைகள் பயனற்றுப்போவதேன்!'/><author><name>இதுதான் இஸ்லாம்</name><uri>http://www.blogger.com/profile/16183141224546404201</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry></feed>
